மேலும் அறிய

குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்? - கதறி அழுத மனைவி

எனது கணவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது. அவர் முழுஆரோக்கியத்துடன் குவைத் நாட்டிற்கு சென்றார். சென்று ஏழு நாட்களே ஆகிறது. அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

லெட்சுமாங்குடியில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றவர் உயிரிழந்துள்ள நிலையில் சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் லெட்சுமாங்குடி பகுதியில் இருந்து ஏராளமான நபர்கள் குவைத் நாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் வேலைக்குச் சென்ற பல நபர்கள் ஊருக்கு திரும்ப முடியாமலும் அதே போன்று மர்மமான முறையில் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி கொரடாச்சேரி சாலை மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜப்பா. இவருடைய மகன் முத்துக்குமரன், வயது 40. இவர் கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து தொலைபேசியில் குடும்பத்தை தொடர்பு கொண்ட முத்துக்குமரன் வேலை கஷ்டமாக உள்ளதாக மனைவி வித்தியாவிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் குவைத்தில் வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் இறந்து விட்டதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் லெட்சுமாங்குடியில் உள்ள அவரது உறவினர்களுக்கு குவைத் நாட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முத்துக்குமரனின் பெற்றோர், மனைவி, மகன்கள், உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.


குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்? - கதறி அழுத மனைவி

மேலும் முத்துக்குமரனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர்களுடைய உறவினர்களும் அவருடைய மனைவி வித்தியாவும் கூறி கதறி அழுதனர். இதுகுறித்து முத்துக்குமரனின் மனைவி வித்யா கூறுகையில்...  “எனது கணவர் முத்துக்குமரன் கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். அதன் பின்னர் இரண்டு தடவை என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது வேலை கஷ்டமாக உள்ளதாகவும் என்னை ஒட்டகம் மேய்ப்பதற்கு பாலைவனத்தில் விட்டு விட்டார்கள். தங்கும் இடத்தில் மின் வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமத்தில் உள்ளதாக கூறினார் இந்த நிலையில் எனது கணவர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. எனது கணவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேகம் உள்ளது. அவர் முழு ஆரோக்கியத்துடன் குவைத் நாட்டிற்கு சென்றார். சென்று ஏழு நாட்களே ஆகிறது. அதற்குள் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் சாவில் மர்மம் உள்ளது.


குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவர் உயிரிழப்பு; சாவில் மர்மம்? - கதறி அழுத மனைவி

எனவே மத்திய மாநில அரசுகள் எனக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவரின் உடலை பத்திரமாக மீட்டு தர வேண்டும்” எனவும் கண்ணீர் மல்க அவருடைய மனைவி மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கூத்தாநல்லூர் மட்டுமின்றி லட்சுமாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசே மத்திய அரசு வறுமை காரணமாக குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்று ஒரே வாரத்தில் கொலை செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரனை படுகொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து குழந்தையுடன் பரிதவிக்கும் முத்துக்குமரனின் குடும்பத்திற்கு தமிழக அரசும் மத்திய அரசும் தக்க நிதியும் இழப்பீடும் வழங்க வேண்டும் என்ற போஸ்டரை அடித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் இன்று முத்துகுமரனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூத்தாநல்லூர் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பாஜகவினர் கண்டன பேரணி நடத்தி கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" வெளியே போகலாம் வா " மனைவியைக் காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்ற கணவன் ! போலீஸ் அதிரடி விசாரணை
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் !! ஆஸ்பத்திரியில் சிக்கிய ‘ போக்ஸோ ' விவகாரம்
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெயிண்டர் !! ஆஸ்பத்திரியில் சிக்கிய ‘ போக்ஸோ ' விவகாரம்
குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு
குறி பார்க்க வந்த இடத்தில் ஆசை வார்த்தை !! மறுப்பு தெரிவித்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு
Madurai ; டாஸ்மாக் கடை இங்கு வேண்டாம்... கருப்புத்துணி கண்ணில் கட்டி களத்தில் இறங்கிய பொதுமக்கள் !
Madurai ; டாஸ்மாக் கடை இங்கு வேண்டாம்... கருப்புத்துணி கண்ணில் கட்டி களத்தில் இறங்கிய பொதுமக்கள் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Warns America: “மறுபடியும் முட்டாள்தனமான காரியம் ஏதாவது செஞ்சா..“ அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; என்ன கூறியது.?
அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்; அசிம் முனீரிடம் கூறியது என்ன.?
Modi Marco Rubio Talks: ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
ட்ரம்ப்பின் முக்கிய செய்தியை கொண்டு வந்த மார்கோ ரூபியோ; பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
iPhone 18 Pro Max Leaks: ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
ஐபோன் 17 ப்ரோவே ரூ.1.3 லட்சம்; அப்போ 18 ப்ரோ எவ்வளவு இருக்கும்.? கசிந்த தகவல் என்னன்னு பாருங்க
Harley-Davidson X440 S Vs RE Guerrilla 450: மோதிப் பார்த்துடுவோம் வா.! ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
ஹார்லி-டேவிட்சன் X440 S Vs ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450; எது பெஸ்ட்.?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
NEET Fee Refund: வெளியானது விவரம்; நீட் தேர்வுக் கட்டணத்தை உடனே திரும்பப் பெறலாம்- எப்படி?
Embed widget