தேனி & திண்டுக்கல்: மின் தடை! முக்கிய பகுதிகளில் மின்சாரம் எப்போது நிறுத்தப்படும்? தெரிந்து கொள்ளுங்கள்!
தேனி மாவட்டத்தில் நாளை டிசம்பர் 4ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் நாளை டிசம்பர் 4ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தேனி, மின் தடை பகுதிகள்
தேனி மாவட்டத்தில், நாளை டிசம்பர் 04, வியாழக்கிழமை ராசிங்காபுரம் துணை மின்நிலையத்திலும், டிசம்பர் 06ம் தேதி சனிக்கிழமை வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையத்திலும் மின்சாரம் தடை செய்யப்பட இருப்பதால் மேற்கண்ட மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில், மேற்கண்ட இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராசிங்காபுரம் போடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 04, வியாழக்கிழமையன்று பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
வண்ணாத்திப்பாறை உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் 6ம் தேதியன்று சனிக்கிழமை லோயர் கேம்ப், மணலார், கே.கே.பட்டி, சுருளிபட்டி, நாராயணதேவர்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மற்றும் சுற்றுப்புற பகுதிகள் எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மின் தடை பகுதிகள்
இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமையன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதனால் கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை, முருகத்தூரன்பட்டி, சாண்டலார்புரம், பள்ளப்பட்டி சிப்காட் தொழில் வளாகம், பள்ளப்பட்டி, மாவூர் அணை பொட்டிகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.





















