மேலும் அறிய

தேனியில் முன் விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் பெண் அடித்து கொலை

தேனி மாவட்டம் கூடலூர் அருகே முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் பெண் அடித்து படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் சரண்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி வடக்கு இந்திரா காலனியை சேர்ந்தவர் பவுன்சாமி (36). இவர், கம்பம் பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆட்டோ  ஓட்டுனராக இருந்து வந்துள்ளார். இவருக்கும், மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்துள்ளனர். இந்தநிலையில் பவுன்சாமி, லட்சுமி என்ற விஜயராணியை (36) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு 2 ஆவது திருமணம் செய்து கொண்டு  குள்ளப்பகவுண்டன்பட்டியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டிற்கு  எதிரே பவுன்சாமியின் தாய்மாமனான தனபாலன் மனைவி பரமேஸ்வரி (50) வசித்து வந்துள்ளார்.

தேனியில் முன் விரோதம்  காரணமாக இரும்பு கம்பியால் பெண் அடித்து கொலை

இவருக்கும், பவுன்சாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்  பரமேஸ்வரி அங்குள்ள தெரு குழாயில் துணி துவைத்து கொண்டிருந்த நிலையில் அப்போது பவுன்சாமி, தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த இரும்புகம்பியால் பரமேஸ்வரியின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியுடன் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று பவுன்சாமி சரண் அடைந்தார். கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த இடம், கூடலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாக இருந்ததால், சரணடைந்தவரகை கம்பம் போலீசார், கூடலூர் தெற்கு காவல் நிலைய போலிசாரிடம் ஒப்படைத்தனர்.


தேனியில் முன் விரோதம்  காரணமாக இரும்பு கம்பியால் பெண் அடித்து கொலை

அவரிடம் செய்ததில்  திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறுகையில் பவுன்சாமி 2-வது திருமணம் செய்த நாளில் இருந்து, அடிக்கடி விஜயராணியுடன் பரமேஸ்வரி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் பரமேஸ்வரி, விஜயராணியை விளக்குமாறால் அடித்ததாக தெரிகிறது. இதில் விஜயராணியின் கையில் விளக்குமாறின் குச்சிகள் குத்தி புண்ணாகியது. இதையடுத்து அவர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விஜயராணிக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது. இதன் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி பரிதாபமாக இறந்தார்.


தேனியில் முன் விரோதம்  காரணமாக இரும்பு கம்பியால் பெண் அடித்து கொலை

மனைவி இறந்த துக்கம் பவுன்சாமியை மிகவும் வாட்டியது. இதனிடையே விஜயராணி இறந்தததால் பரமேஸ்வரி பயந்துபோய் தனது வீட்டில் வசிக்காமல் அதே ஊரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரமேஸ்வரி மீண்டும் தனது வீட்டிற்கு குடி வந்துள்ளார். இது பவுன்சாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. விஜயராணியின் சாவுக்கும், தான் தனியாக வசித்து கஷ்டப்படுவதற்கும் பரமேஸ்வரிதான் காரணம் என்று அவர் கருதினார்.

திருமணமான 22வது நாளில் கணவனை கொல்ல மாஸ்டர் பிளான்: லீக் ஆகிவிடுமோ என்கிற பயத்தில் மனைவி தற்கொலை!

எனவே பரமேஸ்வரியை கொலை செய்ய பவுன்சாமி முடிவு செய்தார்.  இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர் கம்பத்தில் உள்ள ஒரு கடையில் இரும்பு கம்பியை வாங்கினார். அதனை வைத்து பரமேஸ்வரியில் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இதற்கிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்சாமியை கைது செய்தனர். மேலும் பரமேஸ்வரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget