மேலும் அறிய

பழனி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனையா? பக்தர்கள் அதிர்ச்சி

பழனி கோவிலில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யபடும் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு  உள்ளிட்டவை கெட்டுப் போகியிருந்ததால் பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலம் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு  உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் இன்று வரை பஞ்சாமிர்தங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது.


பழனி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனையா? பக்தர்கள் அதிர்ச்சி

கெட்டுப்போன பிரசாதங்கள்:

இதனை கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இரவு பகலாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் கெட்டுப் போன பிரசாதங்களை பக்தர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள்  15 நாட்களுக்குள் விற்கப்பட வேண்டிய நிலையிலும் , லட்டு ,முறுக்கு,  அதிரசம் போன்ற பிரசாதங்கள் தயாரிப்பு தேதி இல்லாமலும் விற்கப்படுவதால் கெட்டுப்போன வாசனை அடிப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.   பழனி உணவுத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.


பழனி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனையா? பக்தர்கள் அதிர்ச்சி

அதிகாரிகள் அதிரடி ஆய்வு:

கடந்த 26 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள்  15 நாட்களுக்குள் விற்கப்பட வேண்டிய நிலையிலும், லட்டு, முறுக்கு,  அதிரசம் போன்ற பிரசாதங்கள் தயாரிப்பு தேதி இல்லாமலும் விற்கப்படுவதால் கெட்டுப்போன வாசனை அடிப்பதாகவும் பக்தர்கள் மற்றும் ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை செந்தில் குமார் குற்றம் சாட்டினார்.


பழனி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனையா? பக்தர்கள் அதிர்ச்சி
இதனால் பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.   பழனி உணவுத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகம் சார்பில்  தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டதற்காக  பொய் செய்தி என பத்திரிக்கை செய்தி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டனர்.

இதனையடுத்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையங்களில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தலைமையில் ஏழு அதிகாரிகள் கெட்டுப்போன பிரசாதம் விற்பனை செய்ததாக கூறப்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கண்டனர். அப்போது லட்டு என்ணெய் சிக்கு வாடை அடிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். லட்டு காய்ந்து விட்டதாகவும் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

Palani Temple: தைப்பூச திருவிழா எதிரொலி; பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா..?

அப்போது பஞ்சாமிர்தக் குடோனை ஆய்வு செய்யாமல் பிரசாதங்கள் தயாரிக்கும் நிலையத்தை மட்டும் ஆய்வு செய்தனர். அப்போதும் கூட பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதி இல்லை என்றும், ஒரு சிலர் மட்டும் வரலாம் என்றும் பழனி காவல் கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்தார். இதனை அடுத்து மூன்று செய்தியாளர்கள் மட்டும் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கிங் செய்யும் கவர்கள் மாற்றப்பட வேண்டும் என்றும், எண்ணையை நன்றாக வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.  மேலும் காலாவதி தேதி பதிவு செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து சென்றனர்.

தலைப்பு செய்திகள்

மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள்: 3ஆம் நூற்றாண்டு பாண்டியர் வரலாறு வெளிச்சத்திற்கு!
மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள்: 3ஆம் நூற்றாண்டு பாண்டியர் வரலாறு வெளிச்சத்திற்கு!
குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் ‘மதுரம் 2026’ நிகழ்வு !
குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் ‘மதுரம் 2026’ நிகழ்வு !
கீழடி, கல்வி மேம்பாடு: முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும் - அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை !
கீழடி, கல்வி மேம்பாடு: முந்தைய அரசின் நல்ல திட்டங்கள் தொடரும் - அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை !
பழனி கோயில் பத்திரப்பதிவு முறைகேடு: நிர்மல்குமார் மீது மூர்த்தி கடும் குற்றச்சாட்டு!
பழனி கோயில் பத்திரப்பதிவு முறைகேடு: நிர்மல்குமார் மீது மூர்த்தி கடும் குற்றச்சாட்டு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget