மேலும் அறிய

10 ஆயிரத்து 944 கோவில்களில் சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன - இந்து சமய அறநிலையத்துறை

10 ஆயிரத்து 944 கோவில்களில் சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன - இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கோவிலின் தல புராணம், கோயில் பூஜை கட்டணங்கள், போன்றவற்றை இணைய தளத்தில் பதிவிடக் கோரிய வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த  கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்," கோயிலுக்கு சொந்தமான இடங்கள், பூஜை கட்டண விபரங்களை கோயில் முன் அனைவரும் பார்க்கும் விதமாக பட்டியல் இடக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவில்களில் தல வரலாறு அதன் பழமை மற்றும் வரலாறு முக்கியத்துவம் தொடர்பான விவரங்கள் அடங்கிய பலகை வைக்கப்பட்டுள்ளது.

தல புராணங்கள் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துவது, ஓலைச்சுவடிகள், தகடுகள் மற்றும் அரிய புத்தகங்களில் உள்ள விபரங்களை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அன்னைத் தமிழில் அர்ச்சனை 48 பழமையான கோவில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பூசாரிகளின் தொடர்பு எண்களும் பெயர்களும் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. அன்னைத்தமிழ் போற்றிப் புத்தகங்கள் என 14 புத்தகங்கள் 2021 ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. கோவில்களில் பூஜை நேரங்கள், பூஜை வகைகள், அதற்கான கட்டணங்கள், சொத்து விபரங்கள், ஆக்கிரமிப்பில் இருக்கும் சொத்துக்கள், வாடகை விடப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய தகவல் பலகை பல கோவில்களில் வைக்கப்பட்டுள்ளது. பிற கோவில்களிலும் வைக்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 2.04 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலங்களும், 2.53 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலங்களும் 0.21 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களும் உள்ளன. 22,006 கட்டிடங்கள் பயன்பாட்டிலும், 33 ஆயிரத்து 665 கட்டிடங்கள் காலியாகவும் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 44 ஆயிரத்து 82 கோவில்கள் உள்ள நிலையில், கோவில் சொத்துக்களை அடையாளம் காண்பதற்காக 40 ஆயிரத்து 584 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 18496 கோவில்களின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கோவில் நிலங்களை அடையாளம் காண்பதற்காக, 8 துணை ஆட்சியர்கள், 18 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள், 18 நில அளவையர், 3 வருவாய் அலுவலர் மற்றும் 9 கிராம நிர்வாக அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை அளவீடு செய்ய சிறப்புக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. நில அளவீடு பணிகளை துரிதப்படுத்த, 100 நில அளவையர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

10 ஆயிரத்து 944 கோவில்களில் சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. கோவில் தொடர்பான கட்டணங்கள் நிகழ்வுகள் போன்றவற்றை நவீன முறையில் இணைய வழியில் கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 48 பழம் பெருமை வாய்ந்த கோவில்களில் 2064 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

இதுபோன்ற பல நடவடிக்கைகள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 


மற்றொரு வழக்கு

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாஞ்சோலை போராளிகள் வீரவணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பீமாராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாஞ்சோலை போராளிகள் வீரவணக்க நினைவேந்தலை முன்னிட்டு 31.07.2022 அன்று கல்யாணி திரையரங்கம் அருகே பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 14.07.22 அன்று அனுமதி அளிக்கும்படி மனு அளித்திருந்தோம். ஆனால் 17.07.22 அன்று போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படவும்; சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget