மதுரை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி... அஞ்சல் துறை அலுவலகம் வெளியிட்ட முக்கிய தகவல் !
நேரடியாக இந்த குறைதீர்ப்பு முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.

தபால் உரையில் ஓய்வூதியதாரர்கள் தங்களது அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்
மதுரையில் உள்ள தென்மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில், மார்ச் 18 ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறை, ரயில்வேத்துறையில் பணியாற்றி ஓய்வூதியப் பலன்களைப் பெறாதவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகள் குறித்து இந்த முகாமில் பரீசிலிக்கப்படும். ஏற்கனவே, கோட்ட அளவில் மனு சமர்ப்பித்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தி அடையாதவர்கள் தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நேரடியாக இந்த குறைதீர்ப்பு முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது, என்று மதுரை தென்மண்டல அஞ்சல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் வசதியும் உள்ளது
அதன்படி, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை 25.02.2026-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை மின்னஞ்சல் வாயிலாக accts.madurai@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் அனுப்பப்படும் மனுக்கள் அடங்கிய தபால் உரையின் மீது “ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் 2026” என்று தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை சாதாரண பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும், தபால் உரையில் ஓய்வூதியதாரர்கள் தங்களது அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி :ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம், கே. பத்மாவதி,கணக்கு அதிகாரி, அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், தென்மண்டலம் (தமிழ்நாடு), மதுரை – 625 002.மேலும், ஓய்வூதியதாரர்கள் வரும் மார்ச் 18ம் தேதி காலை 11 மணிக்கு இந்த குறைதீர்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























