மேலும் அறிய

திண்டுக்கல்: கேரளா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரளா விரைந்த 2 தனிப்படைகள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவரை 3 பேர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

கேரள மாநிலம்    கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க  பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த   பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்தபோது மூன்று   நபர்கள் தன்னை வன்கொடுமை செய்துவிட்டதாக கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கண்ணூர் போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை  மேற்கொண்ட போது கடந்த 19ஆம் தேதி பழனிக்கு தானும் தனது கணவரும்  சென்றதாகவும், அப்போது  பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது   தனது கணவர் அருகில் இருந்த கடைக்கு சென்றுவிட்ட  நிலையில் மூன்று நபர்கள் தன்னை கடத்திச்சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்ததாக கூறியுள்ளார்.

திண்டுக்கல்: கேரளா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரளா விரைந்த 2 தனிப்படைகள்!

பின்னர்  தன்னைத்   தேடிவந்த கணவரை அந்த கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் தங்கும்    விடுதியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார், தங்கும் அறையில்  இருந்து  தப்பி வெளியே வந்து தனது கணவரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறியதாகவும், கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில்    புகார் கொடுக்கவும் சென்றபோது போலீசார் புகாரை வாங்க மறுத்து    விரட்டி அடித்ததால் வேறு   வழியின்றி சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டதாகவும் தெரிவித்தார். பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு சித்திரவதையால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: கேரளா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரளா விரைந்த 2 தனிப்படைகள்!

இன்னிலையில் இந்த  சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த கேரள போலிசார் விசாரணையில் கேரள டிஜிபி அணில் காந்த் தமிழக டிஜிபிக்கு இந்த பாலியல் வழக்கு குறித்து விசாரணை செய்ய கடிதம் எழுதிய நிலையில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிபிரியாவுக்கு இது குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து,  கேரள பெண் பழனிக்கு வருகை தந்தபோது பாலியல் வன்கொடுமை புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், 365 மற்றும் 376D ஆகிய கடத்தல் மற்றும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 

இந்த வழக்கு தொடர்பாக பெண் காவல்ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளிபிரியாவின் நேரடி கண்காணிப்பில் இந்த குழு செயல்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது,

திண்டுக்கல்: கேரளா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரளா விரைந்த 2 தனிப்படைகள்!

இருந்தபோதிலும் கேரள பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பான வழக்கில் கேரள போலீசாருடன் இணைந்து முழுவிசாரணை செய்வோம்  என்றும் தெரிவித்தார்.  மேலும் இந்த பாலியல் வழக்கை விசாரிக்க ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் கேரளா விரைந்துள்ளதாக தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget