மேலும் அறிய

திண்டுக்கல்: கேரளா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரளா விரைந்த 2 தனிப்படைகள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவரை 3 பேர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்

கேரள மாநிலம்    கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க  பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த   பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்தபோது மூன்று   நபர்கள் தன்னை வன்கொடுமை செய்துவிட்டதாக கூறியதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கண்ணூர் போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை  மேற்கொண்ட போது கடந்த 19ஆம் தேதி பழனிக்கு தானும் தனது கணவரும்  சென்றதாகவும், அப்போது  பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது   தனது கணவர் அருகில் இருந்த கடைக்கு சென்றுவிட்ட  நிலையில் மூன்று நபர்கள் தன்னை கடத்திச்சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்ததாக கூறியுள்ளார்.

திண்டுக்கல்: கேரளா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரளா விரைந்த 2 தனிப்படைகள்!

பின்னர்  தன்னைத்   தேடிவந்த கணவரை அந்த கும்பல் அடித்து விரட்டிவிட்டு இரவு முழுவதும் தங்கும்    விடுதியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார், தங்கும் அறையில்  இருந்து  தப்பி வெளியே வந்து தனது கணவரை சந்தித்து நடந்ததை எடுத்துக் கூறியதாகவும், கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில்    புகார் கொடுக்கவும் சென்றபோது போலீசார் புகாரை வாங்க மறுத்து    விரட்டி அடித்ததால் வேறு   வழியின்றி சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டதாகவும் தெரிவித்தார். பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு சித்திரவதையால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசாரிடம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: கேரளா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரளா விரைந்த 2 தனிப்படைகள்!

இன்னிலையில் இந்த  சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த கேரள போலிசார் விசாரணையில் கேரள டிஜிபி அணில் காந்த் தமிழக டிஜிபிக்கு இந்த பாலியல் வழக்கு குறித்து விசாரணை செய்ய கடிதம் எழுதிய நிலையில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிபிரியாவுக்கு இது குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து,  கேரள பெண் பழனிக்கு வருகை தந்தபோது பாலியல் வன்கொடுமை புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், 365 மற்றும் 376D ஆகிய கடத்தல் மற்றும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 

இந்த வழக்கு தொடர்பாக பெண் காவல்ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ரவளிபிரியாவின் நேரடி கண்காணிப்பில் இந்த குழு செயல்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது,

திண்டுக்கல்: கேரளா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கேரளா விரைந்த 2 தனிப்படைகள்!

இருந்தபோதிலும் கேரள பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கப்பட்டு, காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததாக தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றும், இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பான வழக்கில் கேரள போலீசாருடன் இணைந்து முழுவிசாரணை செய்வோம்  என்றும் தெரிவித்தார்.  மேலும் இந்த பாலியல் வழக்கை விசாரிக்க ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் கேரளா விரைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் வெற்றிக் கொண்டாட்டம்.. பேருந்துநிலையத்தில் ரவுண்ட் அடித்து ஸ்வீட் கொடுத்த த.வெ.க..,வினர் !
சிவகங்கையில் வெற்றிக் கொண்டாட்டம்.. பேருந்துநிலையத்தில் ரவுண்ட் அடித்து ஸ்வீட் கொடுத்த த.வெ.க..,வினர் !
தேனி மாவட்டத்தில் தவெக டபுள் வெற்றி!.. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் இதோ!...
தேனி மாவட்டத்தில் தவெக டபுள் வெற்றி!.. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் இதோ!...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அரசியலில் பெரிய திருப்பம்!.. நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி !..
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அரசியலில் பெரிய திருப்பம்!.. நீண்ட இழுபறிக்கு பின் வெற்றி !..
TN Election Results 2026: மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல்களம்.. முன்னிலை நிலவரம் என்ன?
TN Election Results 2026: மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல்களம்.. முன்னிலை நிலவரம் என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: தவெக தனிப்பெரும்பான்மையை தடுத்த 11 தொகுதிகள் எது? எது?
TVK: தவெக தனிப்பெரும்பான்மையை தடுத்த 11 தொகுதிகள் எது? எது?
RB Choudhary : திரைப்பட தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி விபத்தில் மரணம்
RB Choudhary : திரைப்பட தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி விபத்தில் மரணம்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!
Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!
ஜாப் தேடுறவர்களுக்கு ஜாக்பாட்… திருச்சியில் பெரிய வாய்ப்பு!
ஜாப் தேடுறவர்களுக்கு ஜாக்பாட்… திருச்சியில் பெரிய வாய்ப்பு!
Modi on UAE Attack: 'பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' UAE தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
'பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' UAE தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
Thirumavalavan:
Thirumavalavan:"இடதுசாரிகளுடன் இணைந்தே முடிவு!" திருமா கொடுத்த ட்விஸ்ட்! தவெகவுடன் கூட்டணி?
Modi Vs Rahul: “மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜகவின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்“; மோடியை சாடிய ராகுல்
“மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜகவின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்“; மோடியை சாடிய ராகுல்
Embed widget