மேலும் அறிய

பட்டா கத்தியுடன் நடுரோட்டில் மோதி கொண்ட பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் - திருமாறன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

’’தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் மற்றும் தமிழ்த்தேசிய பார்வர்ட் ப்ளாக் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே யார் முதலில் அஞ்சலி செலுத்துவது என்பது குறித்து தகராறு’’

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தவர் எஸ்.ஆர்.தமிழன். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.  ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அவருடைய நினைவு நாளையொட்டி சம்பந்தப்பட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் மற்றும் நிர்வாகிகள் சில கார்களில் வந்தனர். க.விலக்கு பகுதியை கடந்து அவர்கள் தேனிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே திசையில் க.விலக்கில் இருந்து தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகளும் சிலர் கார்களில் வந்து கொண்டிருந்தனர்.

பட்டா கத்தியுடன் நடுரோட்டில் மோதி கொண்ட பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் - திருமாறன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
 
யார் முதலில் அஞ்சலி செலுத்தும் இடத்துக்கு செல்வது என்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. இதனால், போட்டி போட்டு கார்களை ஓட்டி வந்தனர். தேனி புறவழிச்சாலையில் முந்திச் செல்ல முயன்ற போது இருதரப்பினரும் கார்களை சாலையில் நிறுத்தி திடீரென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாக உருவானது. சிலர் காரில் இருந்த பட்டா கத்திகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.

பட்டா கத்தியுடன் நடுரோட்டில் மோதி கொண்ட பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் - திருமாறன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
 
இந்த மோதலில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28), பாலமுருகன் (36), பாண்டியராஜன் (41), தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (20) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். 6 கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த மோதலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டனர். இதையடுத்து இரு தரப்பினரும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

பட்டா கத்தியுடன் நடுரோட்டில் மோதி கொண்ட பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் - திருமாறன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
 
இந்த சம்பவம் தொடர்பாக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன், நிர்வாகிகள் பாலமுருகன், தமிழ்ச்செல்வன் மற்றும் சிலர் மீதும், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் சங்கிலி, மாநில தலைவர் எம்.பி.எஸ்.முருகன், நிர்வாகிகள் செல்வம், சோலைத்தேவன், குமரேசன், வினோத், கோட்டை மற்றும் சிலர் மீதும் தேனி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்தார். இந்த மோதல் தொடர்பாக 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நேற்று இரவு பிடித்து தேனி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.  நடு ரோட்டில் பட்டா கத்தியுடன் சண்டை நடந்த இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

தலைப்பு செய்திகள்

பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget