மேலும் அறிய

சின்னம்மா காலில் தவழ்ந்து தவழ்ந்து முதல்வரானார் பழனிசாமி - போட்டுத்தாக்கிய ஓபிஎஸ்

எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் அதனை பற்றி கவலைப்படாமல் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியாகவே பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் - ஓபிஎஸ் பேச்சு..!

அதிமுகவில் உள்ள ஒன்னறை கோடி தொண்டர்கள் பழனிசாமியை விரைவில் தூக்கி ஏறிவார்கள் என தேனியில் நடைபெற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டத்தில் ஓ.பி.எஸ் பேசினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டு கட்சி பெயர் மற்றும் கொடி சின்னங்களை பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பு வந்ததற்கு பின்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக தொண்டர்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக  அவரது சொந்த மாவட்டமான தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் வெள்ள மண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் தேனி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 2000க்கும் மேற்பட்டோர் இந்த உரிமை மீட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.மேலும் கூட்டத்தில் தொண்டர்களிடையே ஓபிஎஸ் பேசுகையில், "தினம் தினம் எத்தனை தீர்ப்பு வந்தாலும் ஆதரவு தரும் தொண்டர்களுக்கு நன்றி.

சின்னம்மா காலில் தவழ்ந்து தவழ்ந்து முதல்வரானார் பழனிசாமி - போட்டுத்தாக்கிய ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம் ஜி ஆர் , அம்மா மக்களுக்காக பணியாற்றி தொலை நோக்கு திட்டங்களை வழங்கினார்கள். அதிமுகவில் 12 ஆண்டுகள் நான் கட்சியில் பொருளாளராக இருந்த நிலையில பொதுக்குழுவில் அறிக்கை வாசிக்க விடவில்லை. எடப்பாடி நடத்திய பொதுக் குழு கூட்டம் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நடந்தது. பொது செயலாலருக்கான உரிமை தற்போது பரி போயிருக்கிறது. சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளராக வரலாம் என்ற சட்டத்தை அழித்தார்கள் கல் நெஞ்சக்காரர்கள். நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா என்பதை ரத்து செய்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் என்றார்கள். எடப்பாடி தலைமையில் உள்ளாட்சி, இடைத்தோதல் உள்ளிட்ட எட்டு தேர்தலில் தோல்வியுற்றது. கொங்கு மண்டலத்தில் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. தொண்டர்கள உங்களை விரும்பவில்லை என்று தானே அர்த்தம். அம்மாவும், சின்னம்மாவும், எனக்கு முதல்வர் பதவி தந்தார்கள். நான் திரும்ப கொடுத்தேன்.

சின்னம்மா காலில் தவழ்ந்து தவழ்ந்து முதல்வரானார் பழனிசாமி. அம்மா பெற்றுத்தந்த ஆட்சியில் தானே நீங்கள் தவழ்ந்து தவழ்ந்து  முதல்வரானீர்கள். அதற்கு புதுக்கதை சொல்கிறார். நம் உடம்பில  ஒடும் ரத்தம் அதிமுக ரத்தம்.  நமது இலக்கு அதிமுகவை கபட, வேடதாரிகளிடம் இருந்து மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைப்பது,தொண்டர்கள் தான் இயக்கத்தின் நாடி நரம்பாக இருந்த நிலையை,  கட்டமைப்பை உருவாக்கி எந்த தேர்தலிலும் நம்மை வெல்ல முடியாது என்பதை உருவாக்க வேண்டும்.பழனிசாமி அவர்களே பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களும் தூக்கி எறிவார்கள்.


சின்னம்மா காலில் தவழ்ந்து தவழ்ந்து முதல்வரானார் பழனிசாமி - போட்டுத்தாக்கிய ஓபிஎஸ்

அம்மாவின் எண்ணம், எம்ஜிஆர் எண்ணம், தொண்டர்கள் மேடையின் முன்வரிசையில் அமர வேண்டும். ஒரு தொண்டன் முதல்வராகலாம். வேறு எந்த கட்சியிலும் இல்லை.தாத்தா, அப்பா, பேரன் என்ற திமுகவின் நிலை அதிமுகவில் இல்லை.முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி தந்தார். கொடநாடு கொலை கொள்ளை விசாரித்து மூன்று மாதங்களில் குற்றவாளியை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு தெரிவிப்பேன் என்றார். மூன்று ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். கோட நாட்டில் கொலை, கொள்ளை நடத்தியது யார். ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.தமிழகத்தில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒன்றாக இருக்கிறது.

இது ஜனநாயக துரோகம். சின்னம்மாவை இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்கிறார் இபிஎஸ். தவழ்ந்து தவழ்ந்து முதல்வர் பதவி வாங்கிய இபிஎஸ் துரோகம் செய்தார். அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரும் அதிமுக வர வேண்டும் என்கிறார்கள். மீண்டும் அம்மா ஆட்சி மலர வேண்டும்” என்று தொண்டர்கள் உரிமை மீட்பு கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget