மேலும் அறிய

Dindigul: பாலியல் புகார் வழக்கில் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு 7 ஆண்டு சிறை

திண்டுக்கல் அடுத்த முத்தனம்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு பாலியல் தொல்லை புகார் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.

திண்டுக்கல் மாவட்டம்  முத்தனம்பட்டி  பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக இருந்து வருபவர் ஜோதிமுருகன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த மாணவிகள் சிலருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து வந்த நிலையில்,  மாணவிகள் சார்பில் தாளாளர் ஜோதிமுருகனை கண்டித்து போராட்டம் நடந்தது. இதையடுத்து 3 மாணவிகள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் ஜோதிமுருகன் மீதும் மேலும் விடுதி வார்டன் ஆகியோர் மீதும் புகார் கொடுத்தனர்.

Dindigul: பாலியல் புகார் வழக்கில் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு 7 ஆண்டு சிறை

அதன்பேரில் தாளாளர் ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போலீசார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி விடுதி வார்டன் அர்ச்சனாவை போலீசார் கைது செய்தனர். ஆனால் தாளாளர் கைது செய்வதற்கு தப்பி ஓடினார். நீண்ட நாட்களாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில், ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Dindigul: பாலியல் புகார் வழக்கில் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு 7 ஆண்டு சிறை

இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் நிபந்தனை ஜாமீன் பெற்றார். இதை அறிந்த மகளிர் அமைப்புகள் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்களும் நடத்தினர். அதேநேரம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலீசார் மற்றும் அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார்.


Dindigul: பாலியல் புகார் வழக்கில் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு 7 ஆண்டு சிறை

கடந்த 19.11.21 தேதியிலிருந்து  இந்த வழக்கானது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜோதி முருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோரை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்கள். இது தொடர்பான வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி  நேற்று ஜோதி முருகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும், விடுதி காப்பாளர் அர்ச்சனாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget