மேலும் அறிய

மீண்டும் சாம்சங் நிறுவனத்தில் வெடித்த போராட்டம்.. தமிழக அரசுக்கு தலைவலி கொடுக்கிறதா சிஐடியு ?

Samsung Employee Protest : சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து வரும் 19 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என சி.ஐ.டி.யு., அறிவிப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் ஆலை தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கடந்த செப்டம்பர் மாதம் 30 நாட்களுக்கும் மேலாக ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த, பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு அக்டோபர் 14 ஆம் தேதி முதல் வழக்கம் போல தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ்

போராட்டத்தில் இருந்து பணிக்கு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஆலைக்கு உள்ளே முந்தைய பணி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதேபோல, சி.ஐ.டி.யு., தொழிலாளர்களை குறிவைத்து, ஒழுங்கு நடவடிக்கையை மீறியதாக 40  க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளது.

அதேபோல நிர்வாகம் உருவாக்கியுள்ள இன்டர்னல் யூனியனில் இணைய, தொழிலாளர்களை வற்புறுத்தி உள்ளது. தொடர்ந்து, தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், நிர்வாகத்தின் அழுத்தம் தாங்காமல் தொழிலாளர் ஒருவர் நேற்று இரவு தற்கொலைக்கு முயன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரத போராட்டம்

இந்தநிலையில் சாம்சங் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து வரும் 19-ம் தேதி சாம்சங் தொழிற்சாலைக்கு உள்ளேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். 

 

இதுகுறித்து சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் முடிந்து சுமுக சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்ப்பு பின்னணியில் வேலைக்கு சென்ற தொழிலாளிகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்ட உடன்பாட்டிற்கு எதிராக பல்வேறு விதமான பழிவாங்கள் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. 35க்கும் மேற்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட முன்னணி தோழர்களை அதிரடியாக இடமாற்றம் மற்றும் பொய்கூற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டு வருகின்றன.

மன உளைச்சல் 

நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற கமிட்டியில் சேருமாறு தொழிலாளர்களை மணிக்கணக்கில் கவுன்சிலிங் செய்கிற மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நடவடிக்கை தொடர்கின்றன. நிர்வாகத்தின் வற்புறுத்தலை ஏற்க முடியாத தொழிலாளர்கள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆதரவு பெற்ற கமிட்டிகள் மூலம் வசை சொல்லுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

மேற்கண்டசூழலில் சுதாகர் என்கிற ஒரு தொழிலாளியை தொடர்ச்சியாக வற்புறுத்தி அவருக்கு விருப்பம் இல்லாத பகுதியில் கட்டாய இடமாற்றம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய காரணத்தினால் இவர்களின் இம்சைகளை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொள்ள அதிக அளவிலான மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். தன்னுடைய மரணத்திற்கு நிர்வாகத்தின் அச்சுறுத்தலும் பழிவாங்கல் நடவடிக்கைகளே காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உதவி செய்யவும் அவர் நிலைமை குறித்து கேட்டு அறியவும் பணியில் இருந்த சங்கத்தின் நிர்வாகிகளை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை. முதல் கட்டமாக வருகிற 19.12.2024 அன்று பகல் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் 1500 தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள். தொழிற்சங்கத்தை பதிவு செய்யும் பிரச்சினையில் 6 வார காலத்திற்குள் முடிவெடுங்கள் என்று உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்ட பிறகும் தமிழக அரசும் தொழிலாளர் துறையும் இன்று வரையிலும் அது குறித்து சிறு துரும்பை கூட அசைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget