மேலும் அறிய

Oximeter Thermal Scanner | பசுமாடுகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்! - உத்தர பிரதேச அரசு உத்தரவு!

பேரிடர் காலத்தில் பசுக்களுக்கான உதவி மையங்களை (Help Desk) நிறுவச் சொல்லி அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 13 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறையும் தொடர்ந்து நிலவிவருகிறது. இதற்கிடையே உத்திரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அங்கே அரசால் மாவட்ட வாரியாக நிறுவப்பட்டிருக்கும் பசுப்பராமரிப்பு கூடங்களில் ஆக்சிமீட்டர் மற்றும் வெப்பத்தைக் கண்காணிக்கும் கருவியையும் பொருத்த உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் இதுவரை 5268 பசுப்பராமரிப்புக் கூடங்கள் அரசால் நிறுவப்பட்டிருக்கின்றன. இதில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேரிடர் காலத்தில் இந்தப் பசுக்களுக்கான உதவி மையங்களை (Help Desk) நிறுவச் சொல்லி அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

கொரோனா காலத்தில் பசுக்கள் மற்றும் இதர கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க உத்திரப்பிரதேச அரசு தீவண வங்கித் திட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனுடன் பசுப்பராமரிப்பு மையங்கள் சமரசமின்றி கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு பசுப்பராமரிப்பு மையங்களிலும் பசுவின் உடல்நலனைக் கண்காணிக்க பல்ஸ் ஆக்ஸிமீட்டர் எனும் ஆக்சிஜன் அளவீட்டுக் கருவி மற்றும் வெப்பநிலையைக் கண்காணிக்கும் கருவி (Thermo Scanner) ஆகியவைப் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொரோனா காலத்தில் பசுக்கள் மற்றும் இதர கால்நடைகளுக்கான உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க உத்திரப்பிரதேச அரசு தீவன வங்கித் திட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள இந்த 3,452 வங்கிகளின் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் உணவின்றி சாலைகளில் தவிக்கும் கால்நடைகளுக்கு தீவணம் வழங்கப்படும். மேலும் பசுக்களை பராமரிக்கும் விவசாயிகளுக்கு மாதாந்திரமாக 900 ரூபாயும் வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்திருந்தது.

விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா?

முதல் கொரோனா காலக்கட்டம் தொடங்கிய கால்நடை, வீட்டுவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அவை தவறான தகவல் விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாது எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய இரண்டாம் அலைக் காலக்கட்டத்தில் ஐதராபாத் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.  ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 

இதுகுறித்து  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " ஐதராபாத், நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு  கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டதாக இந்த பரிசோதனையை மேற்கொண்ட சிசிஎம்பி-லாகோன்ஸ் மையம்  தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தது.  

 

Also Read: சிங்கங்களுக்கு கொரோனா; ஐதராபாத் உயிரியல் பூங்காவில் தனிமை

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget