மேலும் அறிய

காதல் திருமணம் செய்து ஊர் திரும்பிய பெண் மீது தாக்குதல்... சட்டவிரோத காப் பஞ்சாயத்து நபர்களால் பெண்ணுக்கு கருச்சிதைவு!

நீலாவதியை பஞ்சாயத்து நபர்கள் கடுமையாகத் தாக்கிய நிலையில், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் காதல் திருமணம் புரிந்து மீண்டும் தாய் வீடு திரும்பிய கர்ப்பிணி பெண் மீது காப் பஞ்சாயத்தைச் சேர்ந்த நபர்கள் தாக்குதல் நடத்தியதில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வட மாநிலங்களின் பல பகுதிகளில் இயங்கிவரும் சாதிய அமைப்பான காப் பஞ்சாயத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அவற்றை சட்டவிரோதமானவை என ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், நிகழ்ந்துள்ள இச்சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசம், திருப்பதி மாவட்டம், பழைய வீராபுரம் கிராமத்தைச் சேர்ந்த நீலாவதி என்பவர், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து நீலாவதி கருவுற்ற நிலையில், இதனையறிந்த நீலாவதியின் பெற்றோர் அவரை வீட்டுக்குத் திரும்பும்படி கோரியுள்ளனர்.  இதனையேற்று நீலாவதி கடந்த 14ஆம் தேதி தனது கணவர் ஸ்ரீஹரியுடன் மீண்டும் கிராமத்துக்கு திரும்பியுள்ளார்.

இதனையறிந்த வீராபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் காப் பஞ்சாயத்தைச் சேர்ந்த நபர்கள், நீலாவதி காதல் திருமணம் செய்து ஊர் விதிகளை மீறியதாகக் கூறி, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

இச்சூழலில் நீலாவதியின் குடும்பத்தினர் அந்நபர்களிடம் இரண்டு நாள்கள் அவகாசம் தருமாறு கோரியுள்ளனர். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் நீலாவதி குடும்பத்தினர் பணத்தைக் கொடுக்க முடியாத நிலையில், ஊர் பெரியவர்கள் நீலாவதியை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் நீலாவதி அனுமதிக்கப்ப்பட்ட நிலையில், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னதாக நீலாவதி குடும்பத்தினர் திருப்பதி எஸ்.பியிடம் புகார் அளித்தனர். 

தொடர்ந்து வீராபுரம் கிராமத்துக்கு விரைந்து காவல் துறையினர் நீலாவதியைத் தாக்கிய முருகையா, வாணி, சுனில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காப் பஞ்சாய்த்துகள் சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்ததோடு, சம்மதத்துடன் வயது வந்த இரண்டு நபர்கள் செய்துகொள்ளும் திருமணங்களில் தலையிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

சாதி அல்லது சமூகம் சார்ந்த குழுக்களாக உள்ள காப் பஞ்சாயத்துகள், பெரும்பாலும் வட இந்தியாவின் கிராமப்புறங்களில் இன்றளவும் சட்டவிரோதமாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: New Classrooms: அதிகரிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை; 7,200 புதிய வகுப்பறைகள்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Breaking News LIVE, June 5: அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார்; வெறும் மாயத்தோற்றம் - பழனிசாமி அதிரடி
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Embed widget