Ajit Pawar plane crash: அஜித்பவார் விமானத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன.? விமானி சொன்ன இறுதி வார்த்தை.?
Ajit Pawar plane crash: மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில், விமானத்தின் கடைசி நிமிடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளின் வீடியோ காட்சிகளும், விமானி கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித்பவார் விமான விபத்து
இந்தியாவையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித்பவார் பயணம் செய்த விமான விபத்து தான். பிப்ரவரி 5 ஆம் தேதி அந்த மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து மும்பையில் இருந்து பரிஷத் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்க அஜித் பவார் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சரியாக காலை 8.45 மணியளவில் நடைபெற்ற விபத்தில் அஜித்பவார் உள்ளிட்ட 6 பேர் பலியானார்கள். இந்த விபத்தால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் விமான விபத்து நடைபெறுவதற்கு முன்பாக என்ன நடந்தது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்து நடைபெற்றது எப்படி.?
VSR ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்படும் லியர்ஜெட் 45 என்ற வாடகை விமானம், அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அஜித் பவார் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். இன்று காலை பாராமதி விமான நிலைய ஓடுபாதையில் இருந்து 1,770 மீட்டர் தூரத்தில் விமானம் நெருங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அஜித் பவார் உயிரிழந்துள்ள நிலையில், விமான விபத்து தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், விமானி அறையில் நடந்த உரையாடல், தகவல் தொடர்பு, விமானத் தரவு மற்றும் ஓடுபாதை என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை தொடங்கியுள்ளது. அதே நேரம் விமான விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
VIDEO | CCTV footage shows the crash of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar's chartered aircraft at Baramati Airport.
— Press Trust of India (@PTI_News) January 28, 2026
(Source: Third Party) pic.twitter.com/3yNoX6PGOI
விமானி சொன்ன கடைசி வார்த்தை
விமான கண்காணிப்பு தரவுகளின்படி, மும்பையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்ட விமானம் காலை 8:45 மணியளவில் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும் முயற்சியின் போது விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்து எரிந்ததாக பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. விமானம் ஓடுபாதைக்கு அருகில் வந்த போது விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியுடன் (ATC) பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் இறுதி நேரத்தில் எந்த அபாய அழைப்பும் விமானி (SOS) வெளிப்படுத்தவில்லையெனவும் கூறப்படுகிறது. மேலும் விமானம் தரையிறங்க முயற்சிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு, ஓடுபாதைக்கு அருகில் மோசமான வானிலையாக இருப்பதாகவும், தெளிவற்ற தன்மை இருப்பதாக விமானி கூறியதாகக் கூறப்படுகிறது,
விபத்திற்கு காரணம் என்ன.?
முதல் கட்ட விசாரணையின் படி, இயந்திர செயலிழப்பு, மோசமான வானிலைக்கான ஆரம்ப அறிகுறிகளை DGCA விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் ATC-யிடமிருந்து எந்த மேடே அழைப்பும் வரவில்லை, ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















