மேலும் அறிய

"போலீஸ்க்கு ஒரு வாரம் டைம்.. இல்லனா" கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வழக்கில் மம்தா தடாலடி!

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வழக்கின் குற்றவாளிகளை ஞாயிற்றுக்கிழமைக்குள் கைது செய்யவில்லை என்றால் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா அறிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவருக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. 

நாட்டை உலுக்கிய பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்கம் மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மேற்குவங்கத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு இது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது. இந்த நிலையில், வழக்கை விசாரித்து முடிப்பதற்கு மாநில காவல்துறைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நேரம் தந்துள்ளதாகவும் அதற்குள் விசாரணையை முடிக்கவில்லை என்றால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட பயிற்சி பெண் மருத்துவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருந்தால், அனைவரையும் ஞாயிற்றுக்கிழமைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்போம்" என்றார்.

மம்தா சொன்னது என்ன? சிபிஐயை நக்கலடித்து பேசிய அவர், "வழக்கை முடிக்கும் சதவிகிதம் குறைவாக இருந்தாலும் நாங்கள் ஒப்படைப்போம்" என்றார். காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள காலக்கெடு குறித்து பேசிய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், "நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இன்னும் நான்கைந்து நாட்களில் வேறு குற்றவாளிகள் யாரேனு் இருந்தால் அவர்களை கைது செய்வோம். உதவி எண்கள் அறிவித்துள்ளோம். மருத்துவர்கள் தொலைபேசியில் (மற்றும்) தகவல் தரலாம். அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் தகவல்கள் தரலாம்.

நாங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தொடர்ந்து தொடர்பில் இருப்போம். வழக்கின் முன்னேற்றத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம். அதன் பிறகும் குடும்பம் திருப்தியடையவில்லை என்றால், மேடம் (செல்வி பானர்ஜி) என்ன சொன்னாரோ அது நடக்கும்" என்றார்.

ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் கொல்லப்பட்ட பெண், படித்து வந்துள்ளார். இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவரான அவர், நேற்றுமுன்தினம் (வியாழன்) இரவு தாமதமாக உணவு சாப்பிட்டுவிட்டு மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலில் படிக்கச் சென்றார். மறுநாள் காலை அவர் சுயநினைவின்றி காணப்பட்டார்.

பயிற்சி பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததிருக்கின்றன.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவுDMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமகManimegalai Priyanka Fight | மூக்கை நுழைத்த பிரியங்கா? GOOD BYE சொன்ன மணிமேகலை” நீ அவ்ளோ பெரிய ஆளா”Cuddalore News | ”டேய் பஸ்ஸ நிறுத்துடா”போதை ஆசாமி ரகளைசாலையில் அடித்த லூட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Embed widget