மேலும் அறிய

Watch Video: ஜம்மு -காஷ்மீர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் - சோதனை ஓட்டம் வெற்றி!

Watch Video: ஜம்மு - காஷ்மீர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் ரயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்தை இந்திய ரயில்வே துறை வெற்றிகரமாக செய்துள்ளது.  

ஜம்மு - காஷ்மீர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்:

இந்தியாவில் வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்பாராத அளவில் பயணிகளின் ஆதரவு அதிரிகரித்து வருகிறது. அதோடு, ரயில்வே துறையும் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் 25-ம் தேதி அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் (Shri Mata Vaishno Devi Katra (SVDK) ) - ஸ்ரீநகர் - பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. அதன்படி,  உதாம்பூர் (Shri Mata Vaishno Devi Katra (SVDK) ) ரயில் நிலையத்தில் இருந்து  ஸ்ரீநகர் வரை வந்தே பாரத் ரயில் பயணித்தது. உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

வந்தே பாரத் ரயில் - செனாய் பாலம் (Chenab bridge):

உலகின் மிக நீண்ட ரயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட 115 அடி அதிக உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த செனாப் பாலத்தில் முதல்முறையாக வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம்  வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. 

ஜம்மு - காஷ்மீர் வந்தே பாரத் ரயிலின் சிறப்புகள் என்னென்ன?

ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரையில்  சோதனை மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில்  குளிர்ச்சியான காலநிலைக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளுக்குள் தட்பவெட்ப நிலையை சீராக வைக்கவும் குளிருக்கு ஏற்றார்போல கதகதப்பான சூழல் இருப்பதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் போல் அல்லாமல் இது ஜம்மு - காஷ்மீர் பகுதிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. பயோ டாய்லட் டேங்கில் உள்ள தண்ணீர் உறைந்துவிடாமல் இருக்கவும் ரயில் ஓட்டுநர் பனிப்பொழிவு காலத்திலும் தெளிவாக புறச்சூழல்களை காண் கண்ணாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டால், வாகனங்களை இயக்க முடியாத சூழல் உண்டாகும். தற்போது, செனாப் பால ரயில்வே திட்டத்தின் மூலம், அவர்களுக்கு மாற்று வழி உருவாகியுள்ளது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் அறிமுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வந்தே பாரத் ரயில்களின் சிறப்பம்சங்கள் சில:

  • கவாச் பொருத்தப்பட்டது.
  • தீ பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணக்கமான ரயில்.
  • ஆற்றல் செயல்திறனுக்கான மீளுருவாக்க பிரேக்கிங் சிஸ்டம்.
  • அதிக சராசரி வேகம்.
  • அவசர காலங்களில் பயணிகள் - ரயில் மேலாளர் / லோகோ பைலட் இடையேயான தகவல் தொடர்புக்கான அவசர பேச்சு-பேக் யூனிட்.
  • ஒவ்வொரு முனையிலும் ஓட்டுநர் பெட்டிகளில் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் (பிஆர்எம்) கொண்ட பயணிகளுக்கான தங்குமிடம், அணுகக்கூடிய கழிப்பறைகள்.
  • அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்.
  • 2024 டிசம்பர் 02 நிலவரப்படி, 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 16 வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget