மேலும் அறிய

"சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை" இடஒதுக்கீடு குறித்து குடியரசுத் துணைத் தலைவர் கருத்து!

இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி என்றும் அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு புத்தகமாகப் பார்க்கக் கூடாது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் தன்கர் தெரிவித்துள்ளார்.

பாபா சாஹேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது முன்பு வழங்கப்படாமல் இருந்தது, மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை சுமார் 10 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்தது போன்றவை கவலை அளித்த விஷயங்கள் என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

'இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி'

வெளிநாட்டு மண்ணில் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் தெரிவிக்கப்படுவது குறித்தும் அவர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளி, ஜூனியர் கல்லூரியில் இன்று சம்விதான் மந்திர் எனப்படும் அரசியல் சாசன கோவில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ஜெகதீப் தன்கர், அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு புத்தகமாகப் பார்க்கக் கூடாது என்றும் அரசியலமைப்பு மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.  

அரசியலமைப்பை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பின் கீழ் நாம் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் அதே வேளையில், நமது அரசியலமைப்பு அடிப்படை கடமைகளையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி எனவும் சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை  எனவும் அவர் குறிப்பிட்டார்.

இடஒதுக்கீடு குறித்து குடியரசுத் துணைத் தலைவர் பேசியது என்ன?

பாபா சாஹேப் அம்பேத்கருக்கு 1990 மார்ச் 31 அன்று பாரத ரத்னா வழங்கப்பட்டது எனவும் இந்த கௌரவம் ஏன் முன்னரே வழங்கப்படவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றில் இருண்ட காலமான 21 மாத அவசரநிலை குறித்து இளைய தலைமுறையினர் விழிப்புடன் தகவல்களைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஒரு குறிப்பிட்ட நாளை ஒருபோதும் மறக்காமல் அதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 1975 ஜூன் 25 ஒரு கருப்பு நாள் என்று அவர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் இருண்ட அத்தியாயம் அது எனவும் நமது ஜனநாயகத்தின் இருண்ட காலம் அது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.

அவை தொடர்பான அறிவு அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலிமையை வழங்கும் என அவர் கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். அந்த 21 மாதங்களில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம் என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
IND vs ENG 3rd Test: சண்டை செஞ்சு தோக்கனும்.. சிராஜ், பும்ராவுக்கு ராயல் சல்யூட் - பாராட்டும் ரசிகர்கள்
Embed widget