மேலும் அறிய

"என்னுடைய சாதி பத்தியே அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்" என்ன சொன்னார் துணை ஜனாதிபதி தன்கர்?

1931ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்றும், அவ்வாறு பல முறை நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் தனது சாதி குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என துணை ஜனாதிபதி தன்கர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு சிறப்பானது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் படிநிலையாக இருப்பதுடன், சமூக நீதிக்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

"என்னுடைய சாதி பத்தி தெரிஞ்சிகிட்டேன்"

இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களது விருப்பங்களையும் பூர்த்தி செய்வதாக அமையும் என்று அவர் தெரிவித்தார். தொடக்க காலத்தில், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் இருந்தது.

இறுதியாக, சாதிவாரி கணக்கெடுப்பு 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது என்றும், அவ்வாறு பல முறை நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் எனது சாதி குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்று அவர் தெரிவித்தார். எனவே, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை தாம் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய புள்ளியியல் பணி பயிற்சி முடித்த 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளுக்கான பணியில் சேர உள்ள அதிகாரிகளிடையே உரையாற்றிய தன்கர், “பிரிவினையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிந்தனையுடன் சேகரிக்கப்பட்ட சாதி குறித்த தரவுகள் ஒருங்கிணைப்புக்கான கருவியாக இருக்கும் என்றார்.

என்ன கூறினார் துணை ஜனாதிபதி?

இந்த வழிமுறை சமத்துவத்திற்கான சுருக்கமான அரசியலமைப்பு உறுதிமொழிகளை அளவிடக்கூடிய, பொறுப்புணர்வுள்ள கொள்கை விளைவுகளாக மாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். “வலுவான புள்ளிவிவரங்கள் எதுவுமின்றி பயனுள்ள கொள்கைக்கான திட்டமிடல் செயலானது இருளில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது போன்றது என்று புள்ளிவிவரத் தரவுகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். 

நாட்டின் தேசிய தரவுத்தளத்தில் உள்ள ஒவ்வொரு தரவும் ஒவ்வொரு குடிமகன் தொடர்பான தகவல்களைப் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கானத் திட்டங்களை வகுக்கும் பொது தரவுகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

சேவை செய்வது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்  வளமான அனுபவங்களை அளித்திடும் என்றார். புள்ளிவிபரங்கள் ஒரு கானல் நீர் போன்றது என்றும், ஏனெனில், அவை உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்காது " என்றும் திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுப்பதற்கான இந்தியாவின் விருப்பங்கள் ஆதார அடிப்படையிலான திட்டமிடலில் உறுதியாக வேரூன்றியுள்ளன என்று குடியரசுத் துணைத் தலைவர் மீண்டும் உறுதிபடக் கூறினார் . "ஒரு தேசமாக, நம் அனைவருக்கும் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்பது வெறும் கனவு அல்ல என்றும், அது நம் அனைவரின் குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Low Pressure Area: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; ஒரு வாரத்திற்கு மழை: வானிலை மைய தகவல் என்ன.?
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; ஒரு வாரத்திற்கு மழை: வானிலை மைய தகவல் என்ன.?
INDW vs SAW WC Final: புது சாம்பியன் யார்? இந்தியா - தெ.ஆப்பிரிக்கா இன்று இறுதிப்போட்டியில் மோதல் - எதிர்பார்ப்பில் தேசம்
INDW vs SAW WC Final: புது சாம்பியன் யார்? இந்தியா - தெ.ஆப்பிரிக்கா இன்று இறுதிப்போட்டியில் மோதல் - எதிர்பார்ப்பில் தேசம்
IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Low Pressure Area: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; ஒரு வாரத்திற்கு மழை: வானிலை மைய தகவல் என்ன.?
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; ஒரு வாரத்திற்கு மழை: வானிலை மைய தகவல் என்ன.?
INDW vs SAW WC Final: புது சாம்பியன் யார்? இந்தியா - தெ.ஆப்பிரிக்கா இன்று இறுதிப்போட்டியில் மோதல் - எதிர்பார்ப்பில் தேசம்
INDW vs SAW WC Final: புது சாம்பியன் யார்? இந்தியா - தெ.ஆப்பிரிக்கா இன்று இறுதிப்போட்டியில் மோதல் - எதிர்பார்ப்பில் தேசம்
IndW vs SAW:  இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
IndW vs SAW: இந்திய அணிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! கோப்பை வென்றால் பரிசு மழை!எவ்வளவு தெரியுமா?
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டாலும் அதிமுகவில் இடமில்லை! திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி!
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Andhra Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. சாமி கும்பிட போன இடத்தில் பரிதாபம் - ஆந்திராவில் சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Chennai Crime ; ரயிலில் செல்போனில் ரீல்ஸ் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய்,  6 மாதங்களாக திட்டம்”  செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
EPS On Sengottaiyan: ”திமுக உடன் கூட்டு, பொய், 6 மாதங்களாக திட்டம்” செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Sengottaiyan: EPSதான் ஏ1.. சர்வாதிகாரி! எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
Embed widget