மேலும் அறிய

Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தினை செயல்படுத்தியதில் மோசமான இடத்தில் உத்தரப்பிரதேசம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தினை செயல்படுத்தியதில் மோசமான இடத்தில் உத்தரப்பிரதேசம் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 2024ம் ஆண்டிற்குள் குடிமக்கள் அனைவருக்கும் தூய்மையான குடி நீர் வழங்கும் நோகக்த்துடன் ஜல் ஜீவன் மிஷன் என்கிற திட்டம் மத்திய அரசால் கடந்த 2019ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் இத்திட்டத்தில், குடி நீருக்காக மக்கள்  அலையும் நிலையைப் போக்கி, ஒரு குடும்பத்திற்கு 55 லிட்டர் வரை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, இதற்கு தனி நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் 14% பேர் தான் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

இந்த ஆண்டு மே 5ம் தேதி நிலவரப்படி, உத்தரப்பிரதேசத்திலுள்ள 2.28 கோடி குடும்பத்தினர் குடிநீருக்காக மாற்றுவழியையே பயன்படுத்துகின்றனர் என்ற தகவலின் மூலம், ஜல் ஜீவன் திட்டம் இன்னும் அங்கு பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டம்  மோசமாக செயல்படுத்தப்பட்டிருக்கும் டாப் 5 மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது உத்தரப் பிரதேசம்.


Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

ஜார்கண்ட் மாநிலத்தில் 20 சதவீதமும், சத்தீஸ்கரில் 22 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 23 சதவீதமும், ராஜஸ்தானில் 24 சதவீதமுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 2,64,27,705 குடும்பங்கள் உள்ள நிலையில் 35,86,230 குடும்பங்களுக்கு மட்டுமே இத்திட்டம் போய் சேர்ந்திருக்கிறது. அதே போல ஜார்கண்டில் 59, 23,320 குடும்பங்களில் 11,69,500 குடும்பங்களுக்கும், சத்தீஸ்கரில் 48,59,443 குடும்பங்களில் 10,82,180 குடும்பங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 1,77,22,587 குடும்பங்களில் 40,18,736 குடும்பங்களுக்கும், ராஜஸ்தானில் 1,05,68,805 குடும்பங்களில் 25,68,076 குடும்பங்களுக்கு மட்டுமே இத்திட்டம் போய் சேர்ந்திருக்கிறது.

Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..


Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் அறிக்கைப்படி, இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் சுமார் 2.28 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லை என்றும், மேற்குவங்கத்தில் 1.37 கோடி குடும்பங்களுக்கும், ராஜஸ்தானில் 80 லட்சம் குடும்பங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 1.26 கோடி குடும்பங்களில் 54.33 லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. அதே போல, கர்நாடகாவில் 48.26 லட்சம் குடும்பங்களும், மத்திய பிரதேசத்தில் 49.29 லட்சம் குடும்பங்களும் பயனடைந்திருக்கின்றன. அதாவது, கர்நாடகா 49 சதவீதமும், தமிழ்நாடு 43 சதவீதமும், மத்திய பிரதேசம் 40 சதவீதமும் இத்திட்டத்தினை நிறைவேற்றியிருக்கின்றன.


Uttar Pradesh : 2.28 கோடி குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லை.. ஜல் ஜீவன் திட்டத்தில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம்..

பஞ்சாபில் 99 சதவீதமும், குஜராத்தில் 95 சதவீதமும், இமாச்சலப் பிரதேசத்தில் 94 சதவீதமும், பீகாரில் 93 சதவீதமும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஜல் ஜீவன் திட்டத்தினை 100 சதவீதம் நிறைவேற்றிய மாநிலங்களும் இருக்கின்றன. கோவா, தெலங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் இந்த திட்டத்தை தங்கள் மாநிலங்களில் 100% செயல்படுத்தி சாதனை படைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget