மேலும் அறிய

Uttarkashi Tunnel Collapse: 41 தொழிலாளர்களை மீட்க 6 திட்டங்கள்.. நிபுணர்களின் கணிப்புகளில் எது சாத்தியமாகும்..?

தொழிலாளர்களை மீட்க நிபுணர்கள் போட்டுள்ள 6 திட்டங்கள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.. 

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக உத்தரகாசி சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுடன் இந்த மீட்பு பணிகள் 16வது நாளை கடந்தும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. நேற்று புதிய முயற்சியாக மீட்பு பணிகளிலும் ஈடுபடும் அதிகாரிகள் சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணியை தொடங்கியுள்ளனர். முதல் நாளான நேற்று சுமார் 20 மீட்டர் வரை துளையிடும் பணி நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களை மீட்க போடப்பட்ட 6 திட்டங்களில் செங்குத்து துளையிடுதலும் ஒன்றாகும். 

இந்தநிலையில், தொழிலாளர்களை மீட்க நிபுணர்கள் போட்டுள்ள 6 திட்டங்கள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.. 

திட்டம் 1: 

பழுந்தடைந்த ஆகர் இயந்திரத்தின் உடைந்த பாகங்கள் வெளியே எடுத்தப்பிறகு, தொழிலாளர்களை கொண்டு கைமுறையாக துளையிடும் திட்டத்தை பயன்படுத்த இருக்கின்றன. இந்த திட்டத்தையே மீட்பு பணி அதிகாரிகளும் சிறந்ததாக கருதுகின்றனர். ஆகர் இயந்திரத்தின் பாகங்கள் முழுமையாக அகற்றப்பட்டவுடன், மீதியுள்ள 10 முதல் 12 மீட்டர் இடிபாடுகளை மீட்புப் பணியாளர்கள் கையால் துளையிட்டு அகற்றுவார்கள். ஒரு குறுகிய இடத்திற்குள் இந்த கையால் நடத்தப்படும் உடைப்பு பணியில், ஆஜர் இயந்திரத்தினால் ஏற்கனவே போடப்பட்ட துளைக்குள் சென்று கைகளால் துளையிடுவார். பின்னே செல்லும் மற்ற தொழிலாளர்கள் ஒரு கப்பி மூலம் குப்பைகளை வெளியே அனுப்புவர். ஆனால், இந்த கைகளால் துளையிடும் பணி அதிக நேரம் எடுக்கும் என தெரிகிறது. இன்று இரவுக்குள் உடைந்த பாகங்கள் வெளியே எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டம் 2: 

செங்குத்து துளையிடுதலின் திட்டம் இரண்டு ஏற்கனவே தொடங்கப்பட்டு 86 மீட்டர் இலக்கில் 20 மீட்டர் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த மீட்பு பணிகளில் சட்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த செங்குத்து துளையிடுதல் மட்டும் வெற்றியடைந்தால், தொழிலாளர்கள் ஒவ்வொருவராக கிரேன் மூலம் ராட்டினத்தை பயன்படுத்தி மேலே தூக்கப்படுவார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, இது இரண்டாவது சிறந்த வழியாக கணக்கிடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சென்றடைய ஏற்கனவே 19. 2 மீட்டர் துளை போடப்பட்ட நிலையில், இன்னும் 86 மீட்டர் செங்குத்து துளையிடும் பணி மீதம் இருக்கிறது. இந்த பணிகள் முழுமையடைய இன்னும் 4 நாட்களாவது ஆகும் என்று கூறப்படுகிறது. 

திட்டம் 3:

மீட்புக்குழுவினரின் மூன்றாவது திட்டம், மறு பக்கத்தின் பக்கவாட்டில் துளையிடுவதுதான். ஆனால் அதற்குத் தேவையான உபகரணங்கள் அந்த இடத்தை அடையாததால் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

திட்டம் 4:

சுரங்கப்பாதையின் பார்கோட் முனையிலிருந்தும் தோண்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 10 மீட்டர் தோண்டும் பணி நடந்துள்ளது. இக்கரையில் இருந்து மொத்தம் 483 மீட்டர் தோண்டும் பணி நடைபெற 40 நாட்கள் ஆகலாம் என்றும், இது மாற்று வழியாகவே இந்த தோண்டும் பணி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

திட்டம் 5:

சுரங்கப்பாதையின் பர்கோட் பக்கத்தில் நேற்று காலை குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், 10-12 மீட்டர் பரப்பளவு வரை தோண்டப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், இது சற்று ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது. 

திட்டம் 6:

லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் (ஓய்வு) 6வது திட்டத்தில் சுரங்கப்பாதையின் பக்கங்களை உடைத்து அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ராணுவப் பொறியாளர்கள் உதவி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Embed widget