மேலும் அறிய

UCC: சொல்லி அடித்த பாஜக! சுதந்திர இந்தியாவில் முதல்முறை...உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!

ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும்.

விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சட்ட விதிகள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும்.

பொது சிவில் சட்ட மசோதா:

இந்த பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான சட்ட முன்வடிவை உருவாக்குவதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம்,  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது உத்தரகாண்ட் பாஜக அரசு.  சுமார் ஓராண்டாக மக்களிடம் கருத்துகளை கேட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்தது. 

இந்த அறிக்கையை பொது சிவில் சட்ட வரைவாக தயாரித்து உத்தரகாண்ட் அரசிடம் வழங்கியது. இதற்கு உத்தரகாண்ட மாநில அமைச்சரவையும் கடந்த 4ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரை முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூட்டினார்.

உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்:

பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்ட நிலையில்,  நேற்று காலை சட்டப்பேரவையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.  இந்த மசோதா மீது  நேற்றும், இன்றும் விவாதங்கள் நடைபெற்றது. 

இந்த நிலையில், பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங்  தாமி உரைக்கு பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, நாட்டில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட்.  

மசோதா குறித்து பேசிய முதல்வர் புஸ்கர் சிங் தாமி, ”திருமணம், சொத்துரிமை, விவாகரத்து போன்ற விஷயங்களில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்குமான சம உரிமையை பொது சிவில் சட்ட மசோதா வழங்கும். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை ஒழிப்பதில் பொது சிவில் சட்ட மசோதா முக்கிய பங்காற்றும். இந்த மசோதா யாருக்கும் எதிரானது அல்ல. அனைவரின் நலனுக்காகவும், குறிப்பாக பெண்களின் நலனுக்காகவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார். 

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்னர், இது சட்டமாக்கப்பட்டு மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்று கூறுகின்றன. 

சர்ச்சையை கிளப்பும் சட்டப்பிரிவுகள்:

சட்டப்பிரிவு 4இன் கீழ், திருமணம் செய்து கொள்ள மசோதாவில் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாழ்க்கைத்துணை உயிரோடு இருந்தால் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே, பொது சிவில் சட்டத்தின்படி இரண்டாம் திருமணத்திற்கும் பலதார திருமணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவை பொறுத்தவரையில் கடுமையான சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் கட்டாயம் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  லிவ்-இன் உறவுக்கு வந்து ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், மூன்று மாதங்கள் சிறை தண்டனையோடு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம்.  மேலும், பதிவு செய்யும்போது தவறான தகவலை கொடுத்தால் மூன்று மாதங்கள் சிறை மற்றும ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget