மேலும் அறிய

தற்கொலை செய்துகொண்ட பெண்.. பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட எம்.பி..

2019ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ள உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து வாரணாசி நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ள உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து வாரணாசி நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் மீதான மற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்.

அதுல் ராய், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோசியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 தேசிய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கிழக்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அதுல் ராய் மீது 2019 ஆம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். காவல்துறையிடம் அளித்த புகாரில், அதுல் ராய் தனது வாரணாசி இல்லத்தில் 2018 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அப்பெண் குற்றம்சாட்டினார். 

அவரும் அவரது ஆண் நண்பரும் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே தற்கொலைக்கு முயற்சித்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி மருத்துவமனையில் அவர் இறந்தார். பெண்ணின் நண்பரும் தீக்காயத்தால் உயிரிழந்தார்.

அந்த பெண்ணும் அவரது நண்பரும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதற்கு முன்பு பேஸ்புக் லைவ் வீடியோவை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்பி மற்றும் அவரது உறவினர்களுடன் காவல்துறை கூட்டுச் சேர்ந்து இயங்கி வருவதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் நீதி கிடைக்காது என அவர்கள் இருவரும் இறப்பதற்கு முன்பு தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச காவல்துறை தாக்கல் செய்த தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கில் அதுல் ராய் ஒரு குற்றவாளி ஆவார். மேலும் ஜூலை மாதம் இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

அதுல் ராயுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் வழக்குப் பதிவு செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூன் 2019இல் அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அன்று முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். நவம்பர் 2020 இல், அதுல் ராயின் சகோதரர் வாரணாசியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக போலி வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

அதே ஆண்டு, பரோலில் இருந்தபோது அதுல் ராய் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பதவிப் பிரமாணம் செய்யவில்லை என்று அவரது வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்ய இரண்டு நாள் பரோல் வழங்கியது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Embed widget