மேலும் அறிய

தற்கொலை செய்துகொண்ட பெண்.. பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட எம்.பி..

2019ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ள உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து வாரணாசி நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ள உத்தரப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் அதுல் ராய், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து வாரணாசி நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் மீதான மற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்.

அதுல் ராய், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோசியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 தேசிய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கிழக்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அதுல் ராய் மீது 2019 ஆம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். காவல்துறையிடம் அளித்த புகாரில், அதுல் ராய் தனது வாரணாசி இல்லத்தில் 2018 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அப்பெண் குற்றம்சாட்டினார். 

அவரும் அவரது ஆண் நண்பரும் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே தற்கொலைக்கு முயற்சித்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி மருத்துவமனையில் அவர் இறந்தார். பெண்ணின் நண்பரும் தீக்காயத்தால் உயிரிழந்தார்.

அந்த பெண்ணும் அவரது நண்பரும் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதற்கு முன்பு பேஸ்புக் லைவ் வீடியோவை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்பி மற்றும் அவரது உறவினர்களுடன் காவல்துறை கூட்டுச் சேர்ந்து இயங்கி வருவதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் நீதி கிடைக்காது என அவர்கள் இருவரும் இறப்பதற்கு முன்பு தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச காவல்துறை தாக்கல் செய்த தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கில் அதுல் ராய் ஒரு குற்றவாளி ஆவார். மேலும் ஜூலை மாதம் இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டது.

அதுல் ராயுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் வழக்குப் பதிவு செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூன் 2019இல் அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அன்று முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். நவம்பர் 2020 இல், அதுல் ராயின் சகோதரர் வாரணாசியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக போலி வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

அதே ஆண்டு, பரோலில் இருந்தபோது அதுல் ராய் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பதவிப் பிரமாணம் செய்யவில்லை என்று அவரது வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்ய இரண்டு நாள் பரோல் வழங்கியது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
Embed widget