மேலும் அறிய

45 நாள்களில் 6 முறை பாம்பு கடி.. உயிர் பிழைத்த 'அதிசய மனிதன்'.. உத்தர பிரதேசத்தில் விநோதம்!

உத்தர பிரதேசத்தில் கடந்த 45 நாள்களில் 6 முறை பாம்பு கடித்த பிறகும் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ஃபதேபூர் நகரில் கடந்த 45 நாள்களில் 6 முறை பாம்பு கடித்த பிறகும் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அந்த நபரால் மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர். 

6 முறை பாம்பு கடித்த பிறகும் உயிர் பிழைத்த இளைஞர்: ஃபதேபூர் நகரில் வசித்து வருபவர் விகாஸ் துபே. கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, இவரை முதன்முதலாக பாம்பு கடித்துள்ளது. அன்று இரவு, படுக்கையில் இருந்து எழுகையில் பாம்பு கடித்திருக்கிறது. அவரை, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

அவருக்கு இரண்டு நாள்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால், இந்த சம்பவம் நடந்து 8 நாள்களில் இரண்டாவது முறையாக பாம்பு மீண்டும் கடித்துள்ளது. இதன் காரணமாக, பாம்பின் மீதான பயம் அவரை வாட்ட தொடங்கியுள்ளது.

அவரது பயம் அதிகரித்து வந்த போதிலும், அவர் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் ஒருமுறை வீடு திரும்பினார். தொடர்ச்சியான பாம்பு கடி சம்பவங்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் 17ஆம் தேதி, விகாஸை மூன்றாவது முறையாக பாம்பு கடித்துள்ளது. இந்த முறை, அந்த பாம்பு கடி அவரது உயிருக்கே ஆபத்தாக மாறியுள்ளது.

வியப்பில் மருத்துவர்கள்: இதனால் அவர் சுயநினைவை இழந்தார். செய்வதறியாமல் தவித்த அவரது குடும்பத்தினர், அவரை மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விகாஸ் துபேவை அடிக்கடி பாம்பு கடிப்பதை கண்டு டாக்டர். ஜவஹர் லால் தலைமையிலான மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

ஆனால், மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார்கள். இதுகுறித்து மருத்துவர் லால் கூறுகையில், “இந்த வழக்கு விசித்திரமானது. மூன்றாவது பாம்பு கடிக்கு பிறகு, கிராமத்தை விட்டு வெளியேறுமாறு விகாஸை நான் அறிவுறுத்தினேன்" என்றார்.

மருத்துவர்களின் ஆலோசனையை தொடர்ந்து, ஃபதேபூர் ராதா நகரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு விகாஸ் சென்றுள்ளார். இடத்தை மாற்றிய பிறகும், நான்காவது முறையாக பாம்பு அவரை கடித்துள்ளது. மீண்டும், அதே தனியார் மருத்துவமனைக்கு அவரை அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரே நபரை பாம்பு தொடர்ந்து கடிப்பதை கண்டு மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால், இந்த முறையும் அவரை வெற்றிகரமாக உயிர் பிழைக்க வைத்துள்ளனர் மருத்துவர்கள். ராதாநகரில் உள்ள தனது அத்தை வீட்டில் ​​விகாஸ் துபேவை ஐந்தாவது முறையாக பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து, தங்கள் வீட்டிற்கே பெற்றோர் அவரை அழைத்து சென்றனர். ஜூலை 6 ஆம் தேதி, பாம்பு அவரை 6ஆவது முறையாக கடித்துள்ளது. மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
யார் ஆட்சிக்கு வந்தாலும் டிரான்ஸ்பர்தான்.. நேர்மையின் மறுபெயர் அசோக்.. யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி? 
அதிகார வர்க்கத்தை அலறவிட்ட ஐஏஎஸ் அதிகாரி.. முடிவுக்கு வந்த சகாப்தம்.. யார் இந்த அசோக்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Kamakoti Peetam | காஞ்சிபுரம் சங்கர மடத்தின் புதிய பீடாதிபதி..!யார் இந்த கணேச சர்மா?Ajith Health Condition | அட கடவுளே AK-க்கு என்னாச்சு? மருத்துவமனை REPORT AIRPORT-ல் நடந்த சம்பவம்! | ShaliniMadurai Child Death : ’’என் பிள்ளை போச்சு பள்ளி நிர்வாகம் தான் காரணம்’’கதறும் சிறுமியின் தந்தைTamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
TVK Vijay: கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய் முன்புள்ள மாபெரும் சவால்!
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பு பாமக வெற்றி.. முதலமைச்சர் பொய் சொல்லக்கூடாது - அன்புமணி பரபரப்பு பேட்டி
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
யார் ஆட்சிக்கு வந்தாலும் டிரான்ஸ்பர்தான்.. நேர்மையின் மறுபெயர் அசோக்.. யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி? 
அதிகார வர்க்கத்தை அலறவிட்ட ஐஏஎஸ் அதிகாரி.. முடிவுக்கு வந்த சகாப்தம்.. யார் இந்த அசோக்?
MTC Route Number: சென்னை எம்டிசி பஸ்ல போறவங்களா நீங்க.. அப்போ இந்த முக்கிய மாற்றம் பத்தி தெரிஞ்சுக்கோங்க...
சென்னை எம்டிசி பஸ்ல போறவங்களா நீங்க.. அப்போ இந்த முக்கிய மாற்றம் பத்தி தெரிஞ்சுக்கோங்க...
Trump's Success: சாதித்த ட்ரம்ப்.. சாய்ந்த உக்ரைன்.. கையெழுத்தான ஒப்பந்தம்.. இனி ரஷ்யாவுக்கு சிக்கல் தான்...
சாதித்த ட்ரம்ப்.. சாய்ந்த உக்ரைன்.. கையெழுத்தான ஒப்பந்தம்.. இனி ரஷ்யாவுக்கு சிக்கல் தான்...
IPL 2025: விராட் கோலிக்கே பிடிச்ச பாட்டு சிம்பு பாட்டுதானாம்! என்ன பாட்டு தெரியுமா?
IPL 2025: விராட் கோலிக்கே பிடிச்ச பாட்டு சிம்பு பாட்டுதானாம்! என்ன பாட்டு தெரியுமா?
EMI தொல்லையால் விவசாயி தற்கொலை; புதிய சட்டத்தின்படி நடவடிக்கை அன்புமணி வலியுறுத்தல்
EMI தொல்லையால் விவசாயி தற்கொலை; புதிய சட்டத்தின்படி நடவடிக்கை அன்புமணி வலியுறுத்தல்
Embed widget