மேலும் அறிய

இந்து - முஸ்லிம் காதல்.. மரத்தில் தொங்கிய ஜோடி.. அநியாயமா கொன்னுட்டாங்க!

காதல் ஜோடியின் சடலங்கள், மரத்தில் தொடங்கியபடி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் என்றும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் காதல் ஜோடியின் சடலங்கள், மரத்தில் தொடங்கியபடி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர் என்றும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது கொலை அல்லது தற்கொலையா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்:

சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்து வருவதுதான் காதல். உலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமே காதல்தான். ஆனால், பல சமயத்தில் காதலுக்கு பல்வேறு வகையான ரூபத்தில் எதிர்ப்புகள் வந்துள்ளன. என்னதான் எதிர்ப்பு வந்தாலும், காதலுக்காக தங்களின் உயிரையும் கொடுக்க சிலர் தயங்குவதில்லை.

அந்தமாதிரியான சம்பவம் ஒன்றுதான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. பிஹுரா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா பானோ. இவருக்கு வயது 18. அருகில் உள்ள பஹர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரஜ். இவருக்கு வயது 21. வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள், நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இவர்தளை திருமணம் செய்யவிடாமல் இவர்களின் உறவினர்கள் தடுத்துள்ளனர். இந்த சூழலில், இந்த ஜோடி சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்களது குடும்பத்தினர் தந்த அழுத்தத்தின் பேரில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர்.

கொலையா? தற்கொலையா?

இதைத் தொடர்ந்து, சூரஜின் குடும்பத்தினர் மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். அவருக்கு திருமணமும் நடந்துள்ளது. இந்த நிலையில், திருமணம் ஆன சில நாள்களிலேயே சூரஜ் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி டி. கே. சிங் விரிவாக பேசுகையில், "இருவரும் அரை கிலோமீட்டர் தூரத்தில்தான் வசித்து வந்துள்ளனர். நிஷா பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். ​​சூரஜ் தனது தந்தையுடன் விவசாயத்தில் வேலை செய்து வந்தார்.

அவர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அதே மாந்தோப்பு பகுதியில்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த இடம் நிஷாவின் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலும், சூரஜின் வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவிலும் உள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சூரஜ் வீட்டிலிருந்து காணாமல் போனதாக அவரது மனைவி புகார் அளித்தார். குடும்பத்தினர் தீவிரமாக தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வியாழக்கிழமை அதிகாலையில், வயல்களுக்குச் சென்ற சில கிராமவாசிகள், ஒரு மா மரத்தில் ஜோடியின் உடல்கள் தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முழுமையான விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக தெரிகிறது. ஆனால், கொலைக்கான சாத்தியக்கூறுகளை தாங்கள் நிராகரிக்கவில்லை என காவல்துறை தரப்பு கூறுகிறது. அனைத்து கோணங்களும் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் இரண்டு வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த நபர்களை உள்ளடக்கியது என்பதால், கிராமத்தில் சிறிது பதற்றம் நிலவுகிறது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget