மேலும் அறிய

"என் புருசன் எனக்கு மட்டும்தான்.." போலீசுக்கு சென்ற இரண்டு மனைவிகள்.. ஆச்சரியமளிக்கும் வினோத தீர்ப்பு!

உத்தர பிரதேசத்தில் இரண்டு திருமணம் செய்த கணவன், வாரத்தில் மூன்று நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவி வீட்டிலும் இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

உத்தர பிரதேசத்தில் இரண்டு திருமணம் செய்த கணவன், வாரத்தில் மூன்று நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், அடுத்த மூன்று நாட்கள் இரண்டாவது மனைவி வீட்டிலும் இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டு மனைவிகள்:

உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு பிறகு, தனது கணவர் தன்னை மாமியார் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை என்றும், அதற்கு பதிலாக நகரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்க வைத்துள்ளார் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுகுறித்து, அந்த பெண் அளித்த புகாரில், “திருமணம் ஆனது முதலே என்னை அவரது வீட்டிற்கு அழைத்து செல்ல வற்புறுத்தி வந்தேன். ஆனால், ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினமும் தட்டி கழித்து கொண்டே வந்தார். இதையடுத்து எனது பெற்றோரும் என் கணவரிடம் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியதால், கடந்த சில நாட்களாக தலைமறைவானார்.

தலைமறைவான என் கணவனை தேடி, நானும் எனது பெற்றோரும் என் கணவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றோம். அப்போதுதான் தெரிந்தது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தது” என்று தெரிவித்திருந்தார். 

மனைவிகள் மோதல்:

இதன்பின்னர் இந்த வழக்கானது நாரி உத்தன் கேந்திராவுக்கு கவுன்சிலிங்கிற்காக மாற்றப்பட்டது. இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இரண்டாவது மனைவி தன் கணவர் தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

முதல் மனைவியும் நான்தான் முதல் மனைவி சட்டப்படி என்னுடன் தான் அவர் இருக்க வேண்டும் என்று தகராறில் ஈடுபடத் தொடங்கினார்.  இந்த வழக்கு ஆலோசனைக்காக நாரி உத்தன் கேந்திராவுக்கு (சிவில் தகராறுகளைத் தீர்ப்பதில் காவல்துறைக்கு உதவும் தனியார் குழு) மாற்றப்பட்டது. 

மூன்று நாட்கள்:

இதையடுத்து, இருவரின் கோரிக்கையையும் கேட்டுகொண்ட அந்த குழு, ஒரு வினோதமான முடிவை எடுத்தது. அதன்படி, திங்கள் முதல் புதன் வரை கணவன் முதல் மனைவியுடன் இருப்பான். அதேசமயம், வியாழன் முதல் சனிக்கிழமை வரை, அவர் தனது இரண்டாவது மனைவியுடன் இருப்பார். வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கணவர் யார் வீட்டில் இருக்க விரும்புகிறாரோ அங்கே இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த உடன்பாட்டுக்கு இரண்டு மனைவிகளும் ஓகே சொல்லவே ஒப்பந்தம் செய்யப்பட்டு மூவரும் ஒன்றாக வீட்டிற்கு சென்றனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget