மேலும் அறிய

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் பிரியங்கா காந்தி : திட்டம் என்ன?

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரியங்கா காந்தி தன்னுடைய பணிகள் விரைவில் தொடங்க உள்ளார்.  

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாராகும் முனைப்பில் தற்போது இருந்தே இறங்கியுள்ளது. இதற்காக அம்மாநில கிழக்கு பகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி களத்தில் உள்ளே இறங்கியுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் அந்தக் கட்சி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. அத்துடன் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் அங்கு தற்போது யோகி ஆதித்யநாத் மீது கட்சியில் உள்ள சில தலைவர்களுக்கு அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பாஜக மறுத்து வருகிறது. இந்தச் சூழலில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி களத்தில் குதித்துள்ளது. இதுகுறித்து பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேசத்தில் கட்சி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதை சரிய செய்யவேண்டும். நான் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இங்கு இருப்பேன். கட்சியில் கடந்த காலங்களில் விலகிய பழைய எம்பி எம்.எல்.ஏக்கள் யார் வேண்டுமானாலும் மீண்டும் கட்சியில் இணையலாம். 


உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் பிரியங்கா காந்தி : திட்டம் என்ன?

அவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றி தேர்தலில் போட்டியிட விரும்பினால் தலைமை அது குறித்து பரிசீலனை செய்யும். மேலும் அவர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் தற்போது இருந்தே களப் பணியில் ஈடுபடவேண்டும். அத்துடன் ஒவ்வொரு கிராமங்களிலும் 5 அல்லது 6 பேருக்கு மேல் இறங்கி களப்பணி செய்யும் திட்டமும் வகுத்துள்ளேன்” என கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா காந்தியின் வருகை அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் முதலில் கட்சியை பலப்படுத்தும் வேலையில் இறங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன்பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். 


உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் பிரியங்கா காந்தி : திட்டம் என்ன?

கடந்த 201-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணி பெரிய அளவில் தோல்வியை தழுவியது. மேலும் இவர்களின் கூட்டணி தான் பாஜக அதிக இடங்களை வெல்ல ஒரு காரணமாக அமைந்தது என்றும் அரசியல் விமர்கர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆகவே இம்முறை கூட்டணி விஷயத்தில் காங்கிரஸ் நன்கு யோசித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, சமாஜ்வாதி  தவிர மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப்பிரதேச அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே 2022 சட்டப்பேரவை தேர்தல் மிகவும் சவாலான ஒன்றாக அமையும் என்று கருதப்படுகிறது. 

மேலும் படிக்க: இன்று கூகுள், டூடுல் போட்டுக் கொண்டாடும் கடம்பினி கங்குலி யார் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget