மேலும் அறிய
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக உள்ள ஜவடேகர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை கடந்த மாதம் புனேவில் உள்ள தீனந்த் மங்கேஷ்கர் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட அறிகுறிகள் காரணமாக எடுக்கப்பட்ட மருத்துவ சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

மத்திய அமைச்சர் ஜவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2 -3 நாள்களாக அவரோடு பணி புரிந்தோர் மற்றும் சந்தித்தோர் உடனடியாக தங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அமைச்சர் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார்
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த மாதம் புனேவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
I have tested #COVID positive today. All those who have come in contact with me in the last 2-3 days may please get themselves tested.
— Prakash Javadekar (@PrakashJavdekar) April 16, 2021
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















