![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Breaking LIVE: தமிழகத்தில் இன்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்...!
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
![Breaking LIVE: தமிழகத்தில் இன்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்...! Breaking LIVE: தமிழகத்தில் இன்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/19/79192c42792d4af6957175f055272d8a_original.jpg)
Background
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இந்திய தலைமை பதிவாளர் ஒப்புக்கொண்டுள்ளார். பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதால் இரு சமூகத்தினரும் அரசின் நலத்திட்டங்களை பெற தகுதியுடைவர்கள் ஆவர். இரு சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..!
தமிழகத்தில் இன்று 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை - 118
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை -670
உயிரிழப்பு ஏதும் இல்லை
ஜாலியோ ஓ ஜிம்கானா பாடலை 3 மில்லியனை நெருங்கியது..!
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் 2 சிங்கிள் பாடலான ‘ஜாலியோ ஓ ஜிம்கானா’ பாடலை 3 மில்லியனை நெருங்கியது..!
அலற விட்டு கெத்த காட்டணும்.. விஜய் வாய்ஸில் வெளியானது பீஸ்ட் 2 சிங்கிள்..!!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் இருந்து ஜாலி ஓ ஜிம்கானா பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அண்டை வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கு: ஏபிவிபி முன்னாள் தலைவர் சுப்பையா கைது
அண்டை வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த வழக்கில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவர் சுப்பையா கைது செய்யப்படுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் சுப்பையா கைது செய்யப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆதம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்ததாக கீழ்ப்பாக்கம் புற்றுநோய் பிரிவு துறை தலைவரான டாக்டர் சுப்பையா ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)