மேலும் அறிய

திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..

கேரளாவில் திருச்சூர் பூர விழா கொண்டாட்டங்களை நிறுத்துவது கடினம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.

கேரளாவில் திருச்சூர் பூரம் கொண்டாட்டங்களை நிறுத்துவது கடினம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் அளவு மீண்டும் அதிகரித்துவருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை முன்பைவிட அதிதீவிரமாக பரவிவருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடைவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..

இது ஒருபுறமிருக்க, கேரளாவில் ஆண்டுதோறும் நடக்கும் 'திருச்சூர் பூரம் திருவிழா' இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவிற்காக முன்கூட்டியே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் இந்த திருவிழாவை முழுமையாக நிறுத்தினால் பல பிரச்சனைகள் வரும் என்றும் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார். இந்த திருவிழாவை நடத்த உரிய பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்ற கோவில் தேவஸ்வம் கமிட்டி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களாக இருந்தாலும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், சானிட்டைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..
 
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சைலஜா கடந்த சனிக்கிழமையன்று கேரளா அரசு, மத்திய அரசிடம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கேட்டதாகவும். இதுவரை மத்திய அரசிடமிருந்து 60 லட்சத்து 84 ஆயிரத்து 360 டோஸ்களை கேரளா அரசு பெற்றுள்ளது என்றும் கூறினார். அதேபோல மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டதில் 56 லட்சத்து 75 ஆயிரத்து 138 டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்த பிறகு பேட்டியளித்த கேரளா அமைச்சர் சைலஜா, நாட்டின் பிற பகுதிகளை போலவே கேரளாவிலும் கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் மோசமாக பரவிவருவதாகவும். பரவலை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார். இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், அதிலும் குறிப்பாக 45 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கும் அவர்களில் தடுப்பூசி இன்னும் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் சோதனை நடத்தி வருவதாகவும் கூறினார்.

இதுவரை கேரளாவில் 1 கோடியே 39 லட்சம் பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது, இறப்பு விகிதம் 0.4 % என்ற குறைந்த அளவிலேயே உள்ளது என்று கூறினார். நாட்டின் பிற பகுதிகளில் நோயாளிகளுக்கு போதுமான மருத்துவமனை அல்லது ஆக்ஸிஜன் சப்ளை இல்லை என்று கூறிவரும் நிலையில், கேரளா விடாமுயற்சியுடன் நல்ல திட்டமிடுதலோடு செயல்படுவதாக அவர் கூறினார். 


திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..

கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, மிகக்குறைந்த அறிகுறி உள்ள மக்கள் வீட்டில் தனியறையில் தனிப்படுத்திக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு தனியாக தங்கும் அறை மற்றும் கழிப்பறை கொடுக்கவேண்டும். அப்படி தனியறை கொடுக்க வசதி இல்லாதவர்களுக்கு அரசு பராமரிப்பு மையங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அரசின் மாவட்ட வாரியாக உள்ள மருத்துவ முகாம்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அதேபோல கொரோனாவின் அளவு தீவிரமாக உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் கேரளாவில், கொரோனாவின் இரண்டாம் அலையிலும் கூட தீவிர சிகிச்சை தேவைப்படும் மக்களின் அளவு குறைவாகவே இருந்துவருகிறது என்று அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget