மேலும் அறிய

திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..

கேரளாவில் திருச்சூர் பூர விழா கொண்டாட்டங்களை நிறுத்துவது கடினம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.

கேரளாவில் திருச்சூர் பூரம் கொண்டாட்டங்களை நிறுத்துவது கடினம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் அளவு மீண்டும் அதிகரித்துவருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை முன்பைவிட அதிதீவிரமாக பரவிவருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடைவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..

இது ஒருபுறமிருக்க, கேரளாவில் ஆண்டுதோறும் நடக்கும் 'திருச்சூர் பூரம் திருவிழா' இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவிற்காக முன்கூட்டியே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் இந்த திருவிழாவை முழுமையாக நிறுத்தினால் பல பிரச்சனைகள் வரும் என்றும் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார். இந்த திருவிழாவை நடத்த உரிய பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்ற கோவில் தேவஸ்வம் கமிட்டி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களாக இருந்தாலும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், சானிட்டைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..
 
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சைலஜா கடந்த சனிக்கிழமையன்று கேரளா அரசு, மத்திய அரசிடம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கேட்டதாகவும். இதுவரை மத்திய அரசிடமிருந்து 60 லட்சத்து 84 ஆயிரத்து 360 டோஸ்களை கேரளா அரசு பெற்றுள்ளது என்றும் கூறினார். அதேபோல மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டதில் 56 லட்சத்து 75 ஆயிரத்து 138 டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்த பிறகு பேட்டியளித்த கேரளா அமைச்சர் சைலஜா, நாட்டின் பிற பகுதிகளை போலவே கேரளாவிலும் கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் மோசமாக பரவிவருவதாகவும். பரவலை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார். இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், அதிலும் குறிப்பாக 45 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கும் அவர்களில் தடுப்பூசி இன்னும் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் சோதனை நடத்தி வருவதாகவும் கூறினார்.

இதுவரை கேரளாவில் 1 கோடியே 39 லட்சம் பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது, இறப்பு விகிதம் 0.4 % என்ற குறைந்த அளவிலேயே உள்ளது என்று கூறினார். நாட்டின் பிற பகுதிகளில் நோயாளிகளுக்கு போதுமான மருத்துவமனை அல்லது ஆக்ஸிஜன் சப்ளை இல்லை என்று கூறிவரும் நிலையில், கேரளா விடாமுயற்சியுடன் நல்ல திட்டமிடுதலோடு செயல்படுவதாக அவர் கூறினார். 


திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..

கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, மிகக்குறைந்த அறிகுறி உள்ள மக்கள் வீட்டில் தனியறையில் தனிப்படுத்திக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு தனியாக தங்கும் அறை மற்றும் கழிப்பறை கொடுக்கவேண்டும். அப்படி தனியறை கொடுக்க வசதி இல்லாதவர்களுக்கு அரசு பராமரிப்பு மையங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அரசின் மாவட்ட வாரியாக உள்ள மருத்துவ முகாம்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அதேபோல கொரோனாவின் அளவு தீவிரமாக உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் கேரளாவில், கொரோனாவின் இரண்டாம் அலையிலும் கூட தீவிர சிகிச்சை தேவைப்படும் மக்களின் அளவு குறைவாகவே இருந்துவருகிறது என்று அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Embed widget