மேலும் அறிய

திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..

கேரளாவில் திருச்சூர் பூர விழா கொண்டாட்டங்களை நிறுத்துவது கடினம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.

கேரளாவில் திருச்சூர் பூரம் கொண்டாட்டங்களை நிறுத்துவது கடினம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் அளவு மீண்டும் அதிகரித்துவருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை முன்பைவிட அதிதீவிரமாக பரவிவருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடைவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..

இது ஒருபுறமிருக்க, கேரளாவில் ஆண்டுதோறும் நடக்கும் 'திருச்சூர் பூரம் திருவிழா' இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவிற்காக முன்கூட்டியே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் இந்த திருவிழாவை முழுமையாக நிறுத்தினால் பல பிரச்சனைகள் வரும் என்றும் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார். இந்த திருவிழாவை நடத்த உரிய பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்ற கோவில் தேவஸ்வம் கமிட்டி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களாக இருந்தாலும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், சானிட்டைசர் பயன்படுத்துதல் உள்ளிட்ட விதிகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..
 
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சைலஜா கடந்த சனிக்கிழமையன்று கேரளா அரசு, மத்திய அரசிடம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கேட்டதாகவும். இதுவரை மத்திய அரசிடமிருந்து 60 லட்சத்து 84 ஆயிரத்து 360 டோஸ்களை கேரளா அரசு பெற்றுள்ளது என்றும் கூறினார். அதேபோல மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டதில் 56 லட்சத்து 75 ஆயிரத்து 138 டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்த பிறகு பேட்டியளித்த கேரளா அமைச்சர் சைலஜா, நாட்டின் பிற பகுதிகளை போலவே கேரளாவிலும் கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் மோசமாக பரவிவருவதாகவும். பரவலை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார். இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2.5 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், அதிலும் குறிப்பாக 45 வயதிற்கு கீழே இருப்பவர்களுக்கும் அவர்களில் தடுப்பூசி இன்னும் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் சோதனை நடத்தி வருவதாகவும் கூறினார்.

இதுவரை கேரளாவில் 1 கோடியே 39 லட்சம் பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது, இறப்பு விகிதம் 0.4 % என்ற குறைந்த அளவிலேயே உள்ளது என்று கூறினார். நாட்டின் பிற பகுதிகளில் நோயாளிகளுக்கு போதுமான மருத்துவமனை அல்லது ஆக்ஸிஜன் சப்ளை இல்லை என்று கூறிவரும் நிலையில், கேரளா விடாமுயற்சியுடன் நல்ல திட்டமிடுதலோடு செயல்படுவதாக அவர் கூறினார். 


திருச்சூர் பூரம் நடக்கும்.. கொண்டாட்டங்களை முழுமையாக நிறுத்தமுடியாது - கேரள அமைச்சர் ஷைலஜா..

கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, மிகக்குறைந்த அறிகுறி உள்ள மக்கள் வீட்டில் தனியறையில் தனிப்படுத்திக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு தனியாக தங்கும் அறை மற்றும் கழிப்பறை கொடுக்கவேண்டும். அப்படி தனியறை கொடுக்க வசதி இல்லாதவர்களுக்கு அரசு பராமரிப்பு மையங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அரசின் மாவட்ட வாரியாக உள்ள மருத்துவ முகாம்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அதேபோல கொரோனாவின் அளவு தீவிரமாக உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் கேரளாவில், கொரோனாவின் இரண்டாம் அலையிலும் கூட தீவிர சிகிச்சை தேவைப்படும் மக்களின் அளவு குறைவாகவே இருந்துவருகிறது என்று அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget