மேலும் அறிய

"ராணுவ வீரர்களைக் கொன்ற பயங்கரவாதிகள் என்ன ஆனாலும் கொல்லப்படுவார்கள்," ரஜோரியில் ராஜ்நாத் சிங்!

"ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் எவரும் தப்பிக்க முடியாது" என்று ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் போது கூறியதாக கூறப்படுகிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், ராணுவ வீரர்களைக் கொல்வதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை அனுப்பிய ராணுவ வீரர்களுடன் சனிக்கிழமை உரையாடினார்.

ரஜோரி பகுதியில் தீவிரவாத தாக்குதல்

இந்த ஆண்டு தொடக்கத்தில் ரஜோரியின் தாங்ரி கிராமத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து இராணுவ வீரர்களும் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் இதுவரை நடந்த நடவடிக்கையில் ஒரு முக்கிய அதிகாரி காயமடைந்தார். வெள்ளிக்கிழமை காலை கேசரி மலை வனப்பகுதியில் தீவிரவாதிகளை விரட்டியடிக்க படைகள் சென்றபோது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்த நிலையில், மறுநாள் காலை, நள்ளிரவுக்கு பிறகு பயங்கரவாதி தனது மற்றொரு கூட்டாளியுடன் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஆப்ரேஷன் "திரிநேத்ரா"

மற்றொரு பயங்கரவாதி பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்ததாக நம்பப்படுகிறது. கடைசி அறிக்கைகள் பெறப்பட்டபோது “திரிநேத்ரா” என்ற ஆப்ரேஷன் தொடர்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “சனிக்கிழமை என்கவுண்டருக்குப் பிறகு பயங்கரவாதிகளுடன் புதிய சண்டை எதுவும் இல்லை," என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், "இப்பகுதியில் மாலையில் (சனிக்கிழமை) பலத்த மழை பெய்ததால் மேற்கொண்டு முன்னேறிச் செல்லமுடியவில்லை, ஆனால் நடவடிக்கை நடந்து வருகிறது, மேலும் அனைத்து தப்பிக்கும் வழிகளும் அடைக்கப்பட்டு அப்பகுதி இறுக்கமான பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது," என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்: Karnataka Opinion Poll: கர்நாடகாவில் எந்த மண்டலத்தில் "கை" ஓங்கும்? "தாமரை" மலரும்? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..!

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ராணுவம், போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் நடவடிக்கை பகுதியில் நிறுத்தப்பட்டு, பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார். லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆகியோருடன் ரஜோரியில் உள்ள ராணுவப் பிரிவு தலைமையகத்துக்கு ராஜ்நாத் சிங் வந்தார். வடக்கு கமாண்டிங்-இன்-சீஃப் (ஜிஓசி-இன்-சி) லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி மற்றும் களத் தளபதிகள், ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் கண்டி காடு மற்றும் பிற பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சரிடம் விளக்கினர்.

பயங்கரவாதிகள் கொல்லப்படுவார்கள்

ராணுவ வீரர்களைக் கொன்ற பயங்கரவாதிகள் என்ன ஆனாலும் கொல்லப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் தனது பயணத்தின் போது தெளிவான செய்தியை அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் எவரும் தப்பிக்க முடியாது" என்று ராஜ்நாத் சிங் தனது பயணத்தின் போது கூறியதாக கூறப்படுகிறது. ரஜோரியிலிருந்து விமானம் மூலம் ஜம்முவுக்குத் திரும்பிய பின், பாதுகாப்பு அமைச்சர் மதியம் புது தில்லிக்குப் புறப்பட்டார். பத்தாண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதம் இல்லாததாக அறிவிக்கப்பட்ட ஜம்முவில் உள்ள ரஜோரி மற்றும் பூஞ்ச், அக்டோபர் 2021 முதல் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களால் உலுக்கபட்டது, இதன் விளைவாக 26 வீரர்கள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget