மேலும் அறிய

Jammu & Kashmir Encounter: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி..நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் உள்ளது.

தற்போது, இரண்டும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்களும் குறைந்திருப்பதாக மத்திய அரசும் தெரிவித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் என்கவுண்டர்:

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதுகுறித்து ஜம்முவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் கூறுகையில், "ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுண்டர் தொடர்ந்து வருகிறது" என்றார்.

இதையும் படிங்க..

Jailed Pakistan PMs: திரும்பிய வரலாறு..பெனாசிர் பூட்டோ முதல் இம்ரான் கான் வரை..கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களின் கதை

என்கவுன்டர், எப்படி நடைபெற்றது என்பதை விவரித்த அதிகாரிகள், "புத்தல் பகுதியில் உள்ள குந்தா-கவாஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் அங்கு சுற்றிவளைத்தனர். தேடுதல் நடவடிக்கையின் போது இந்த என்கவுன்டர் தொடங்கியது. முற்றுகையிடப்பட்ட கிராமத்திலிருந்து சில துப்பாக்கிச் சூடுச் சத்தங்கள் கேட்டன. கூடுதல் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன" என்றனர்.

முன்னதாக, குட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.

காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2013ஆம் ஆண்டில் காஷ்மீரில் தீவிரவாதத்தோடு தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை 170ஆக பதிவான நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு 260 சதவீதம் அதிகரித்து 614 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த 2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், தீவிரவாதத்தோடு தொடர்புடைய தாக்குதல்கள் மொத்தம் 1,717 நடந்த நிலையில், 2014 முதல் 2018 வரையிலான பாஜகவின் ஆட்சிக்காலத்தில் சற்றே குறைவாக 1,708 தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 250 முறை ஊடுருவல்கள் நிகழ்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் அதிகளவிலான ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பான்மையானவை முறியடிக்கப்பட்டது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Fuel Shortage: எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு உறுதி
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget