மேலும் அறிய

Jammu & Kashmir Encounter: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு..என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி..நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் உள்ளது.

தற்போது, இரண்டும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்களும் குறைந்திருப்பதாக மத்திய அரசும் தெரிவித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் என்கவுண்டர்:

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதுகுறித்து ஜம்முவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் கூறுகையில், "ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுண்டர் தொடர்ந்து வருகிறது" என்றார்.

இதையும் படிங்க..

Jailed Pakistan PMs: திரும்பிய வரலாறு..பெனாசிர் பூட்டோ முதல் இம்ரான் கான் வரை..கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களின் கதை

என்கவுன்டர், எப்படி நடைபெற்றது என்பதை விவரித்த அதிகாரிகள், "புத்தல் பகுதியில் உள்ள குந்தா-கவாஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் அங்கு சுற்றிவளைத்தனர். தேடுதல் நடவடிக்கையின் போது இந்த என்கவுன்டர் தொடங்கியது. முற்றுகையிடப்பட்ட கிராமத்திலிருந்து சில துப்பாக்கிச் சூடுச் சத்தங்கள் கேட்டன. கூடுதல் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன" என்றனர்.

முன்னதாக, குட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.

காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2013ஆம் ஆண்டில் காஷ்மீரில் தீவிரவாதத்தோடு தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை 170ஆக பதிவான நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு 260 சதவீதம் அதிகரித்து 614 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த 2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், தீவிரவாதத்தோடு தொடர்புடைய தாக்குதல்கள் மொத்தம் 1,717 நடந்த நிலையில், 2014 முதல் 2018 வரையிலான பாஜகவின் ஆட்சிக்காலத்தில் சற்றே குறைவாக 1,708 தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 250 முறை ஊடுருவல்கள் நிகழ்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் அதிகளவிலான ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பான்மையானவை முறியடிக்கப்பட்டது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget