மேலும் அறிய

வெள்ளத்தில் நடந்த வேட்டை.. துண்டு துண்டாய் வெட்டப்பட்டு முதலைக்கறி விற்பனை.. தெலங்கானாவில் நடந்தது என்ன?

தெலங்கானாவில் முதலையை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் என வட இந்தியாவில் வெளுத்து வாங்கிய மழையால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்த நிலையில், தெலங்கானாவிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது.

வரலாறு காணாத மழை, வெள்ளம்:

வரலாறு காணாத அளவிற்கு பெய்த இந்த மழையால் அந்த மாநிலத்தில் பெரியளவு சேதாரம் ஏற்பட்டது. தெலங்கானாவில் பெய்த மழை காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள ஆறுகள், நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடிய நீர்நிலைகளால், ஆழமான ஆற்றுப்பகுதிகளில், நீர்நிலைகளில் வசித்து வந்த உயிரினங்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

தெலங்கானாவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மாவட்டங்களில் வானாபர்தி, கட்வால், நாராயணபேட்டை மற்றும் முழுகு மாவட்டங்களும் அடங்கும். இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த ஆற்றுப்பகுதிகளில் வாழ்ந்து வந்த முதலைகள் ஊர்களுக்குள் புகுந்தது.

முதலை மாமிசம்:

அவ்வாறு ஊருக்குள் புகுந்த முதலைகளை கண்டு பலரும் பயந்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சிலர் அந்த முதலைகளை சட்டவிரோதமாக வேட்டையாடியுள்ளனர். சில நபர்கள் முதலைகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, முழுகு மாவட்டத்தில் உள்ள வஜேடா மண்ட,ல் பகுதியில் அமைந்துள்ளது சந்தரபட்லா கிராமம். இந்த கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக முதலைகள் மாமிசத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிரடியாக கிராமத்திற்குள் புகுந்த அதிகாரிகள் முதலைகள் மாமிசத்தை விற்பனை செய்த கும்பலை சுற்றி வளைத்தனர். ஆனால், ஒருவரை மட்டுமே அவர்களால் கைது செய்ய முடிந்தது. மற்றவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.

விற்பனை:

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து முதலைகள் மாமிசத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். தெலங்கானாவில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, கோதாவரி ஆற்றின் வந்த வெள்ளத்தின் போது குடியிருப்பின் உள்ளே புகுந்த முதலைகள்தான் இவைகள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெள்ளத்தினால் ஊருக்குள் புகுந்த முதலைகளை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை சிலர் விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெள்ளத்தின்போது குடியிருப்புகளுக்குள் புகுந்த பாம்பு, முதலைகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தும் பணியை வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: Haryana Violence: "ஹரியானா வன்முறைக்கு காரணம் இதுதான்.." துணை முதலமைச்சர் துஷ்யந்த் பரபரப்பு பேட்டி..!

மேலும் படிக்க: Haryana Clashes: 3-வது நாளாக பற்றி எரியும் ஹரியானா...அண்டை மாநிலங்களுக்கு பரவும் பதற்றம்...உச்சகட்ட அலர்ட்டில் டெல்லி!

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget