மேலும் அறிய

கேரளாவில் வியக்க வைக்கும் எண்ணிக்கை! தமிழகம் ஏன் பின்தங்கியது? நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு!

கேரளாவின் முதலாவது தேசிய பூங்கா என்பதுடன், வரையாடுகள் அதிகம் இருக்கும் இடமாகவும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள், வேறு எங்கும் இல்லாத வகையில், கேரள மாநிலம் இரவிக்குளம் தேசிய பூங்காவில், 841 இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில், யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், வரையாடுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை, 2022ல் அரசு அறிவித்தது.


கேரளாவில் வியக்க வைக்கும் எண்ணிக்கை! தமிழகம் ஏன் பின்தங்கியது? நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு!

கோவையில் இதற்கென தனி அலுவலகம் துவங்கப்பட்டு, வரையாடுகள் வாழ்விட பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அடையாளமாக வரையாடுகள் அறிவிக்கப்பட்டாலும், வரையாடுகள் பாதுகாப்பில் கேரள வனத்துறை புதிய உயரத்தை அடைந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இரவிக்குளம் பகுதி, 1975ல் வன உயிரின சரணாலயமாகவும், 1978ல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது பொன்விழா ஆண்டில் உள்ளது.

கேரளாவின் முதலாவது தேசிய பூங்கா என்பதுடன், வரையாடுகள் அதிகம் இருக்கும் இடமாகவும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கேரள வனத்துறையுடன் தமிழக அரசு இணைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக வரையாடுகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தில், வரையாடுகள் எண்ணிக்கை, தற்போது, 1,303 ஆக உள்ளது. கேரளாவில், 1,365 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில், இரவிக்குளம் தேசிய பூங்காவில் மட்டும், 2024ல் 827 ஆக இருந்த வரையாடுகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு, 841 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே இடத்தில் அதிகபட்சமாக, 200 வரையாடுகள் வரை மட்டுமே இருக்கின்றன.


கேரளாவில் வியக்க வைக்கும் எண்ணிக்கை! தமிழகம் ஏன் பின்தங்கியது? நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு!

ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் வாழ்வதற்கான காரணங்கள் குறித்து, வன உயிரியல் ஆர்வலர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.  இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கையில், இது குறித்து, 'தி நேச்சர் டிரஸட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது, தமிழகத்தில் கிடைத்த அனுபவம் அடிப்படையில், வரையாடுகளை மிக தொலைவில் தான் பார்க்க முடியும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், கேரள மாநிலம், இரவிக்குளத்தில் மக்கள் நடமாடும் இடங்களுக்கு வரையாடுகள் தானாக வருகின்றன. மக்கள் எவ்வித அச்சமும் இன்றி, வரையாடுகளை மிக நெருக்கமாக பார்ப்பதற்கான சூழல் அங்கு நிலவுகிறது. கேரள எல்லையில் உள்ள ராஜமலையில் காணப்படும் ஒருவகை புற்கள் தான், வரையாடுகள் அதிகம் இருக்க காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக, இங்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் புற்கள் தீயிட்டு எரிக்கப்படும்.


கேரளாவில் வியக்க வைக்கும் எண்ணிக்கை! தமிழகம் ஏன் பின்தங்கியது? நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு!

இதன்பின், பருவமழை துவங்கும் போது, புதிதாக செழிப்பான புற்கள் அதிகமாக வளரும். இதுவே, வரையாடுகள் இங்கு தொடர்ந்து முகாமிட காரணமாக பார்க்கப்படுகிறது. பழங்குடியினர் தொடர்ந்து செய்து வந்த இந்த நடைமுறை தற்போதும் தொடர்வதால், இப்பகுதி, வரையாடுகளின் நிரந்தர புகலிடமாக மாறியுள்ளது. ராஜமலையின் மறுபக்கத்தில், தமிழகத்தின், 'கிராஸ் ஹில்ஸ்' தேசிய பூங்கா அமைந்துள்ளது. இரவிக்குளத்தில் இருந்து, 'கிராஸ் ஹில்ஸ்' பகுதிக்கு வரையாடுகள் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். எனவே, வரையாடுகளின் தேவை அறிந்து, அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக வனத் துறை திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget