மேலும் அறிய

Atiq Ahmed : கொலையாளிகளுக்கு தெரிந்தது எப்படி? ரவுடி அத்திக் அகமது கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் போலீஸ் காவலில் இருந்த பிரபல ரவுடிகள் அத்திக் அகமது, அஷ்ரப் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டும் இன்றி, ஏப்ரல் 13ஆம் தேதி ஜான்சியில் சிறப்பு அதிரடிப்படையினரால் கொல்லப்பட்ட அகமதுவின் மகன் ஆசாத்தின் போலீஸ் என்கவுன்டர் பற்றியும் அறிக்கை தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"கொலையாளிகளுக்கு தெரிந்தது எப்படி?"

அத்திக் அகமது கொலை தொடர்பாக பல முக்கிய கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், "அவர்களுக்கு (கொலையாளிகளுக்கு) எப்படித் தெரிந்தது? சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்தோம். அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரரை ஏன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை? ஏன் நடக்க வைத்து கொண்டு சென்றார்கள்" என தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த உத்தர பிரதேச அரசு தரப்பு, "நீதிமன்ற உத்தரவின் பேரில் மருத்துவ பரிசோதனைக்காக சகோதரர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதனால், அவர்கள் கொண்டு செல்வது பற்றி பத்திரிகைகளுக்குத் தெரியும். இது தொடர்பாக நாங்கள் ஒரு கமிஷனை நியமித்துள்ளோம்" என தெரிவித்தது.

விசாரணையில், உத்தர பிரதேச அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "இந்த நபர் (அத்திக் அகமத்) மற்றும் அவரது முழு குடும்பமும் கடந்த 30 ஆண்டுகளாக கொடூரமான வழக்குகளில் சிக்கியுள்ளனர். குறிப்பாக இந்த சம்பவம் ஒரு கொடூரமான சம்பவம். கொலையாளிகளை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும், பிரபலம் அடைவதற்காக கொலை செய்ததாக கொலையாளிகள் கூறினர்.

கொலைகளை அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்தனர். கொலையாளிகள் செய்தி புகைப்படக்காரர்கள் வேடத்தில் வந்தனர். அவர்களிடம் பாஸ்கள் இருந்தன. கேமராக்கள் இருந்தன. மேலும், அடையாள அட்டைகளை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர், அவை போலியானது என்று கண்டறியப்பட்டது. கிட்டத்தட்ட 50 பேர் அங்கிருந்தனர். வெளியேவும் இருந்தனர். இப்படிதான், அவர்களால் கொலை செய்ய முடிந்தது" என்றார்.

கொலைக்கான பின்னணி:

கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால். இவரை  கடந்த 2007 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிரபல ரவுடியுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோருக்கு கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரயாக்ராஜ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 

இதனிடையே  சில நாட்கள் முன்பு உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அத்திக் அகமதுவின் மகன்கள் ஆசாத் மற்றும்  குலாம் ஆகியோர் ஜான்சியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கும், எதிர் தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆசாத் மற்றும் குலாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

போலீசார் முன்பே சுட்டுக்கொலை:

இதனையடுத்து உமேஷ் பால் கொலை வழக்கில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பொய்யாகச் சிக்க வைத்து, தாங்கள் உத்தரப்பிரதேச காவல்துறையால் போலி என்கவுன்டரில் கொல்லப்படலாம் என்று கூறி, பாதுகாப்பிற்காக உச்ச நீதிமன்றத்தில் அத்திக் அகமது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இதனை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 

இப்படியான சூழலில் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜ் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து இருவரையும் சரமாரியாக சுட்டனர். இதில் அத்திக், அஷ்ரப் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Embed widget