மேலும் அறிய

Demonetization: “நோக்கம் முக்கியம் கிடையாது; பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்” - அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்

மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் ஊழல் மற்றும் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளானதோடு, கருப்பு பணம் என்பது ஒழிக்கப்படவில்லை என, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினர் குற்றம்சாட்டினர். இதனிடையே, மத்திய அரசின் பணமதிப்பிழப்பை செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட, 58 மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் கீழ் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. 

5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை:

ஜனவரி 4 ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை கடந்த டிசம்பர் 7ம் தேதி விசாரித்தது. அப்போது, பணமதிப்பிழப்பை செல்லாது என அறிவிப்பது கடிகாரத்தை மீண்டும் திருப்பும் முயற்சி” போன்றது எனவும்,  அந்த முடிவை மீண்டும் வாபஸ் பெற முடியாது என்றும் மத்திய அரசு தரப்பு வாதிட்டது. அதைதொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று வெளியிட்டனர்.

பணமதிப்பிழப்பு செல்லும்:

அந்த தீர்ப்பில், ”பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய நடவடிக்கையை கொண்டு வருவதற்கு நியாயமான தொடர்பு இருந்துள்ளது.  மேலும் பணமதிப்பு நீக்கம் விகிதாச்சாரக் கோட்பாட்டால் பாதிக்கப்படவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். பணமதிப்பு நீக்கத்தை கொண்டு வர ரிசர்வ் வங்கிக்கு சுதந்திரமான அதிகாரம் இல்லை. மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதனை கொள்கை முடிவாக எடுத்துள்ளது. பணமதிப்பு இழக்கத்தின் நோக்கம் எட்டப்பட்டாத என்பது இந்த வழக்கில் முக்கியத்துவம் பெறவில்லை. எனவே, 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை உச்சநீதிமன்றம் ஆதரிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நான்கு நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்க, நீதிபதி பி.வி.நாகரத்னா  மட்டும் பணமதிப்பிழப்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..
Tesla Model Y இந்தியா விற்பனை துவக்கம்: 6 லட்சம் முன்பணம் மற்றும் பயன்கள் தகவல்! விபரம் இதோ..
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Top 10 News Headlines: தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget