மேலும் அறிய

Pariksha Pe Charcha: ஆன்லைன் வகுப்பில் ரீல்ஸ் பார்க்கிறோமா, படிக்கிறோமா என யோசித்துக்கொள்ளுங்கள் - அட்வைஸ் சொன்ன பிரதமர்

பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.தேர்வுகள் குறித்தும் அது தொடர்பான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். 

மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கல்வியில் கவனம் இருக்கிறாதா அல்லது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கிறார்களா என்ற கேள்வியை தங்களுக்குள் கேட்டுப் பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி மாணாவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி 'பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில்  கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள் குறித்தும் அவை அளிக்கும்  அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 

இந்த நிகழ்வுக்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  போட்டி ஒன்று நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.தேர்வுகள் குறித்தும் அது தொடர்பான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். 

கடந்த, 2021ம் ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்நிலையில், 5வது ஆண்டாக இன்று டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர் மாணவர்களிடம் பேசுகையில், ”மாணவர்கள் தங்கள் கல்வி குறித்து சிந்திக்க வேண்டும். ஆன்லைன் வழியாக நடக்கும் வகுப்புகளில், கவனம் முழுவதும் பாடம் கற்பதில் இருக்கிறதா அல்லது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்த்து நேரத்தை வீணடிக்கிறோமா என்ற கேள்வியை மாணவர்கள் அனைவரும் தங்கள்ளுக்குள் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அழுத்தத்தின் கீழ் இருப்பதாக மாணவர்கள் உணரக்கூடாது.

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்க கூடாது. அதேபோல், பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முழு சுதந்திரத்துடன் அனுமதிக்கப்பட வேண்டும்.


Pariksha Pe Charcha: ஆன்லைன் வகுப்பில் ரீல்ஸ் பார்க்கிறோமா, படிக்கிறோமா என யோசித்துக்கொள்ளுங்கள் - அட்வைஸ் சொன்ன பிரதமர்

தேர்வுகளை நினைத்து மாணவர்கள் அச்சம் கொள்ளக்கூடாது. தேர்வுகளின்போது மாணவர்கள் பயத்திடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நண்பர்களை போன்றே நாமும் இருக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் எதைச் செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள், நீங்கள் அனைவரும் உங்கள் தேர்வை திருவிழா போல கொண்டாட்ட மனநிலையில் சந்திக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்

மேலும், தேசியக் கல்விக் கொள்கை NEP 2020-இன் பல்வேறு நன்மைகள் விரைவில் நமக்கு தெரியவரும். அதனால், தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ நடைமுறைப்படுத்துமாறு பள்ளிகள், கல்வித் துறைகள் மற்றும் ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் நம் மாணவர்கள் அந்த கொள்கையின் பலன்களைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்வு உற்சாகம் அளிக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது மதிப்புமிக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்களிக்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள்" எனப் பதிவிட்டிருந்தார். இன்னொரு டிவிட்டர் பதிவில், என் இளம் நண்பர்களுடன் என்று குறிப்பிட்டிருந்தார்.

தலைப்பு செய்திகள்

8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
Kia 7 Seater Hybrid: 7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
7 சீட்டர், ஹைப்ரிட், 4 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் அம்சங்கள் - கியாவின் புது எஸ்யுவி எப்படி? விலை?
Gold and silver rate today : குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
குஷியோ குஷி.! வாரத்தின் முதல் நாளே ரூ.10,000 சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஜாக்பாட்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? ஸ்டாலின் பெயரில் கல்வெட்டை அகற்றுவதா.?? இறங்கி அடிக்கும் திமுக
TNEB Employees Allowance: மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
மின் வாரிய ஊழியர்களுக்கு குஷி.! ரூ.10,000 அள்ளிக்கொடுக்கும் அரசு-வெளியான முக்கிய அறிவிப்பு
Embed widget