மேலும் அறிய

Pariksha Pe Charcha: ஆன்லைன் வகுப்பில் ரீல்ஸ் பார்க்கிறோமா, படிக்கிறோமா என யோசித்துக்கொள்ளுங்கள் - அட்வைஸ் சொன்ன பிரதமர்

பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.தேர்வுகள் குறித்தும் அது தொடர்பான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். 

மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கல்வியில் கவனம் இருக்கிறாதா அல்லது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்க்கிறார்களா என்ற கேள்வியை தங்களுக்குள் கேட்டுப் பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி மாணாவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி 'பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில்  கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள் குறித்தும் அவை அளிக்கும்  அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 

இந்த நிகழ்வுக்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  போட்டி ஒன்று நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.தேர்வுகள் குறித்தும் அது தொடர்பான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். 

கடந்த, 2021ம் ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்நிலையில், 5வது ஆண்டாக இன்று டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, அவர் மாணவர்களிடம் பேசுகையில், ”மாணவர்கள் தங்கள் கல்வி குறித்து சிந்திக்க வேண்டும். ஆன்லைன் வழியாக நடக்கும் வகுப்புகளில், கவனம் முழுவதும் பாடம் கற்பதில் இருக்கிறதா அல்லது சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பார்த்து நேரத்தை வீணடிக்கிறோமா என்ற கேள்வியை மாணவர்கள் அனைவரும் தங்கள்ளுக்குள் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அழுத்தத்தின் கீழ் இருப்பதாக மாணவர்கள் உணரக்கூடாது.

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்க கூடாது. அதேபோல், பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முழு சுதந்திரத்துடன் அனுமதிக்கப்பட வேண்டும்.


Pariksha Pe Charcha:  ஆன்லைன் வகுப்பில் ரீல்ஸ் பார்க்கிறோமா, படிக்கிறோமா என யோசித்துக்கொள்ளுங்கள் - அட்வைஸ் சொன்ன பிரதமர்

தேர்வுகளை நினைத்து மாணவர்கள் அச்சம் கொள்ளக்கூடாது. தேர்வுகளின்போது மாணவர்கள் பயத்திடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நண்பர்களை போன்றே நாமும் இருக்க வேண்டிய அவசியமில்லை, நீங்கள் எதைச் செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள், நீங்கள் அனைவரும் உங்கள் தேர்வை திருவிழா போல கொண்டாட்ட மனநிலையில் சந்திக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்

மேலும், தேசியக் கல்விக் கொள்கை NEP 2020-இன் பல்வேறு நன்மைகள் விரைவில் நமக்கு தெரியவரும். அதனால், தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ நடைமுறைப்படுத்துமாறு பள்ளிகள், கல்வித் துறைகள் மற்றும் ஆசிரியர்களை நான் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் நம் மாணவர்கள் அந்த கொள்கையின் பலன்களைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்வு உற்சாகம் அளிக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது மதிப்புமிக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்களிக்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள்" எனப் பதிவிட்டிருந்தார். இன்னொரு டிவிட்டர் பதிவில், என் இளம் நண்பர்களுடன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget