மேலும் அறிய

கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதா? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முக்கிய தகவல்..!

கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய மற்றும் தலித் மக்கள் மீது வன்முறையை அரங்கேற்றி அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து சிறும்பான்மையினர், தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதா?

கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய மற்றும் தலித் மக்கள் மீது வன்முறையை அரங்கேற்றி அவர்களது சொத்துக்கள் சூறையாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மதமாற்றம் செய்கிறார்கள் என்று கூறி கிறிஸ்தவர்களின் மீதும் சமீப காலமாக தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. 

தேவாலயங்களுக்கு தீ வைப்பது, கற்களை வீசி தாக்குதல் நடத்துவது, அமைதியாக நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் புகுந்து மதமாற்றம் நடைபெறுகிறது எனக் கூறி பாதிரியார்கள், கிறிஸ்தவ மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு நேற்று பதில் அளித்துள்ளது. கொதிநிலையில் வைத்திருப்பதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் இது மிகைப்படுத்தப்பட்ட தவறான எண்ணத்தை தருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முக்கிய தகவல்..!

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது வாதிட்ட அவர், "குறிப்பிட்ட மத பிரிவினர் மீதான தாக்குதலை நிரூபிக்க மனுதாரர்கள் அளித்த புள்ளி விவரங்கள் தவறானவை. கிறிஸ்தவர்கள் மீது கிட்டத்தட்ட 500 தாக்குதல்கள் நடந்ததாக மனுதாரர்கள் கூறுகின்றனர். எல்லா விவரங்களையும் மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளோம்.

பீகார் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். மனுதாரர்கள் பேசும் தாக்குதல்கள் அண்டை வீட்டாருக்கு இடையே நடந்த சண்டை. அவர்களில் ஒருவர் கிறிஸ்தவராக இருந்திருக்கிறார். பின்னர், பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தவறானவை.

மனுதாரர்கள் கொடுத்த தாக்குதல் விவரங்கள் அடங்கிய பட்டியலில் 495இல் 263 சம்பவங்களில் பெரும்பாலானவை மாநில அதிகாரிகளிடம் கூட தெரிவிக்கப்படவில்லை. பதிவாகிய 232 சம்பவங்களில், 73 சம்பவங்கள் இரு தரப்புக்கும் இடையே பரஸ்பர உடன்படிக்கையுடன் சுமுகமாகத் தீர்க்கப்பட்டன.

இந்த 73 சம்பவங்கள் நிலத் தகராறு, குடும்பத் தகராறு, மூடநம்பிக்கை பழக்கவழக்கங்கள், கோவிட்-19 வழிகாட்டுதல்களை மீறுதல் மற்றும் இதர அற்பமான பிரச்சினைகளுடன் தொடர்பானவை. மீதமுள்ள 155 வழக்குகளில் எப்ஐஆர்/எப்ஐஆர் அல்லாத புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Congress Candidate List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யார்? எங்கு போட்டி? பரபரப்பு பட்டியல் இதோ!
Embed widget