மேலும் அறிய

"வேகமாக முன்னேறி வரும் கூட்டுறவுத்துறை" பெருமையாக சொன்ன அமித் ஷா

பல ஆண்டுகளாக நாட்டில் கூட்டுறவு இயக்கம் செயலிழந்து வந்ததாகவும் இதற்கு காரணம், கூட்டுறவு சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படவில்லை என்றும் மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற மாநில அளவிலான கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா இன்று (13.04.2025) தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பல ஆண்டுகளாக நாட்டில் கூட்டுறவு இயக்கம் செயலிழந்து வந்ததாக கூறினார். இதற்கு காரணம், கூட்டுறவு சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படவில்லை எனக் கூறினார். 

"கூட்டுறவுத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம்"

நாட்டில் வேகமாக மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்தின் புவியியல் நிலை, மழைப்பொழிவு, கிராமப்புற வளர்ச்சி, வேளாண் மேம்பாடு, கால்நடை வளர்ப்பு பரிமாணங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, தேசிய அளவில் எந்த சிந்தனையும் செலுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

தேசிய அளவில் கூட்டுறவு அமைச்சகம் இல்லாததால் இதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை என்று அமித் ஷா கூறினார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவியதாகவும் அதில் முதல் கூட்டுறவு அமைச்சராகும் வாய்ப்புத் தமக்குக் கிடைத்தது என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவுத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இப்போது இந்தத் துறை வேகமாக முன்னேறி வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

என்ன பேசினார் அமித் ஷா? 

நமது அரசியல் சாசனத்தில் இருந்த வரம்புகள் இன்னும் அப்படியே உள்ளன என்று அவர் கூறினார். இன்றும், கூட்டுறவு என்பது ஒரு மாநில விஷயமாக உள்ளது எனவும் இத்துறையில் மத்திய அரசு எந்த சட்ட மாற்றங்களையும் செய்ய முடியாது என்றும் அமித் ஷா கூறினார்.

இருப்பினும், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களுக்கு புத்துயிரூட்டவும், பால்வளத் துறையை மேம்படுத்தவும், கூட்டுறவு சீரான மேலாண்மைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

பொதுக் கணக்கு ஆணையத்தை வலுப்படுத்தாவிட்டால், மூன்றடுக்கு கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். முந்தைய தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் குறுகிய கால விவசாயக் கடன்களை மட்டுமே வழங்கி வந்ததாகவும் இதில் அவை அரை சதவீத வருமானத்தை ஈட்டியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இன்று இந்த சங்கங்கள் 20-க்கும் மேற்பட்ட வகையான சேவைகளை வழங்கி வருவதாலும் புதிய சீர்திருத்தங்களாலும் அவற்றின் வருமானம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மக்கள் மருந்தக மையம், பொதுச் சேவை மையங்கள் போன்ற சேவைகளை வழங்க தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அமித் ஷா கூறினார். இந்த சங்கங்கள் இப்போது உர விற்பனையாளர்களாக மாறலாம் எனவும் பெட்ரோல் நிலையங்களைத் தொடங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget