மேலும் அறிய

Shimla: ”குட்டை பாவாடை அணிந்துகொண்டு கோயிலுக்கு வராதீங்க” - ஜெயின் கோயில் வாசலில் ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு

"குட்டை உடைகள், அரை பேன்ட், பெர்முடா, மினி ஸ்கர்ட், நைட் சூட், கிழிந்த ஜீன்ஸ், ஃபிராக் மற்றும் முக்கால் ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணிந்தவர்கள் கோவிலுக்கு வெளியே தரிசனம் செய்து விட்டு செல்ல வேண்டும்"

சிம்லாவில் உள்ள ஒரு நூற்றாண்டு பழமையான ஜெயின் கோவிலுக்கு குட்டையான ஆடைகளை அணிந்து பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து கலாச்சாரத்தின் ஒழுக்கம், அலங்காரம் மற்றும் மதிப்புகளை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி சன்னதியில் உள்ள அதிகாரிகள் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளனர்.

கோயிலுக்கு வெளியே நோட்டீஸ்

ஸ்ரீ திகம்பர் ஜெயின் சபையால் நடத்தப்படும் இக்கோயில், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே பிரபலமானது. புதிய ஆடைக் குறியீட்டை வலியுறுத்தி கோயில் நிர்வாகம் சமீபத்தில் கோவிலுக்கு வெளியே அறிவிப்பு ஒன்றை வைத்தது. "பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் கண்ணியமான ஆடைகளை அணிந்து கோவிலுக்கு வர வேண்டும். குட்டை உடைகள், அரை பேன்ட், பெர்முடா, மினி ஸ்கர்ட், நைட் சூட், கிழிந்த ஜீன்ஸ், ஃபிராக் மற்றும் முக்கால் ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணிந்தவர்கள் கோவில் வளாகத்திற்கு வெளியே தரிசனம் செய்து விட்டு செல்ல வேண்டும்," என சிம்லாவில் உள்ள ஸ்ரீ திகம்பர் ஜெயின் சபாவின் ஜெயின் கோவிலுக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பில் எழுதியுள்ளது.

Shimla: ”குட்டை பாவாடை அணிந்துகொண்டு கோயிலுக்கு வராதீங்க” - ஜெயின் கோயில் வாசலில் ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு

ஆடைக்கட்டுப்பாடு குறித்து கோவில் பூசாரி

ஜைன கோவிலின் பூசாரி ஒருவர் சனிக்கிழமை கூறுகையில், பெண்களின் மாறிவரும் நாகரீகம் மற்றும் ஆடை விருப்பங்கள் மற்றும் குறைந்து வரும் இந்து சமூகத்தின் மதிப்புகள் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஒழுக்கம், பாரம்பரியம் முதலிய விழுமியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். "கோவிலுக்கு வரும் அனைவரும் கண்ணியமான உடையில் இருக்க வேண்டும். அரை பேன்ட், அரை ஆடை, மினிஸ்கர்ட், கிழிந்த ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்து வருபவர்கள் நுழைவதை நாங்கள் தடை செய்துள்ளோம். கலாசாரம், பாரம்பரியம் என்பது போராட்டமாக மாறி வருகிறது," என்று சிம்லா ஜெயின் கோவிலின் பூசாரி பண்டிட் சஞ்சய் குமார் ஜெயின் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்: “என் கிரிக்கெட் வாழ்கை முடிந்து விட்டது என்று என் மனைவியிடம் முன்பே சொல்லிவிட்டேன்” - WTC க்கு பின் அஸ்வின்!

இந்துக்கள் தான் நாகரிகங்களை மறக்கின்றனர் 

மேலும் பேசிய அவர், "முன்பெல்லாம் நம் பெரியோர்கள் கண்ணியமான உடையில் கோவில்களுக்கு செல்வார்கள். ஆனால் தற்போது சிறுவர், சிறுமிகள் முதல் வயது வந்த பெண்கள் வரை குட்டையான ஆடையில் கோவில்களுக்கு செல்வது நல்லதல்ல. மேற்கத்திய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தின் வருகை நமது மத விழுமியங்களை சிதைக்கிறது. இந்த முடிவு மத நெறிமுறைகளின்படி எடுக்கப்பட்டது. பிற மதங்களை கடைப்பிடிக்கும் மக்கள் தங்கள் அடிப்படை மத நம்பிக்கைகள் மற்றும் வழிகளில் இருந்து ஒருபோதும் விலக மாட்டார்கள், ஆனால் இந்து மற்றும் சனாதன தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மத விழுமியங்களுடன் சமரசம் செய்கிறார்கள்," என்றார்.

Shimla: ”குட்டை பாவாடை அணிந்துகொண்டு கோயிலுக்கு வராதீங்க” - ஜெயின் கோயில் வாசலில் ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு

சொந்த கலாச்சாரத்தை மறந்துவிடுகிறோம்

"புதிய ஆடைக் குறியீட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் பலகையை நாங்கள் வைத்துள்ளோம். பக்தர்கள் அதைப் பின்தொடரத் தொடங்கியுள்ளனர்" என்று பூசாரி மேலும் கூறினார். "இது 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவில். இந்த முடிவு நமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. குட்டையான ஆடையில் கோவில்களுக்கு வருபவர்கள் இந்த வழிபாட்டு தலங்களுடன் தொடர்புடைய பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் மீறுகிறார்கள்," என்று ஒரு பக்தர் கூறினார். ஹர்ஷ் ஜெயின் என்ற மற்றொரு பக்தர், "எங்கள் கலாச்சாரம் குறுகிய ஆடைகளை அணிவதை அனுமதிப்பதில்லை. கோவில்கள் என்று வரும்போது, விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி, சொந்த கலாச்சாரத்தை மறந்து விடுகிறோம்," என்றார்.

இந்த அறிவிப்புக்கு அதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், இதே போல சமீபத்தில், புதுதில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜமா மசூதியின் காவலர்கள் சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டனர். அங்கு வரும் பெண்கள், ஆண் துணையுடன் வருவதைத் தடை செய்தனர். இருப்பினும், சமூக ஊடகங்களில் வந்த எதிர்ப்பு காரணமாக ஒட்டபட்ட நோட்டீஸ் நீக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget