மேலும் அறிய

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

இந்திய வரலாற்றில் பயங்கரவாதிகள் நடத்திய மோசமான தாக்குதலாக பதான்கோட் தாக்குதல் கருதப்படுகிறது. இது இந்திய மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். ஜனவரி 5ஆம் தேதி வரை தொடர்ந்த இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 4 பேரும் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேரும் அப்பாவி ஒருவரும் கொல்லப்பட்டனர். 

ஆரம்பத்தில், இந்த தாக்குதலுக்கு காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாத இயக்கமான ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பொறுப்பேற்றபோதிலும், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களே, இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் பயங்கரவாதிகள் நடத்திய மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி:

பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஷாஹித் லத்தீப் இன்று அடையாளம் தெரிய மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சியால்கோட் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கியமான பயங்கரவாதிகளில் ஒருவராக இருப்பவர்.

இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, "மசூதிக்குள் லத்தீப் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். இந்த தாக்குதலில் மேலும் ஒரு ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளனர்" என்றார்.

இவர், சியால்கோட் நகரில் உள்ள நூத் மசூதியில் முல்லாவாக பணியாற்றி வந்துள்ளார். பதான்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய 4 பயங்கரவாதிகளுக்கு, லத்தீப்தான் வழிகாட்டி வந்துள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்:

கடந்த 1994ஆம் ஆண்டு இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு, தண்டனை முடிந்தவுடன், வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். 41 வயதான இவர், 2010ஆம் ஆண்டு இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம், கராச்சியில் லஷ்கர் அமைப்பின் முப்தி கைசர் ஃபரூக் மற்றும் ஜியாவுர்-ரஹ்மான் கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம், ராவல்பிண்டியில் ஹிஸ்புல் அமைப்பின் தளபதி பஷீர் அகமது பீர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானில் கடந்த 18 மாதங்களில் மேலும் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் விவகாரம் காரணமாக இந்திய, பாகிஸ்தான் உறவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: Senthil Balaji Case: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget