மேலும் அறிய

போன் பேசல.. சிறுமியை உயிரோடு எரித்த நபர்! கைது செய்தபோது பெருமையாக சிரிப்பு! தொடரும் விசாரணை!

பின்னர்தான், 12ஆம் வகுப்பு மாணவி, தன் உடலில் தீப்பிடித்திருப்பதை உணர்ந்துள்ளார். அவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஷாருக் ஹுசைன், அவருக்கு உயிருடன் தீ வைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 23 அன்று, ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் 16 வயது பள்ளி மாணவி, தன்னை தொந்தரவு செய்த இளைஞர் ஒருவரைப் பற்றி தனது தந்தையிடம் கூறிவிட்டு தூங்கச் சென்றார். சில மணி நேரங்களுக்குப் பிறகு, தூங்கி எழுந்தபோது அவரின் முதுகில் கடும் வலி இருந்துள்ளது. எரியும் வாசனை வந்துள்ளது.

 

பின்னர்தான், 12ஆம் வகுப்பு மாணவி, தன் உடலில் தீப்பிடித்திருப்பதை உணர்ந்துள்ளார். அவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஷாருக் ஹுசைன், அவருக்கு உயிருடன் தீ வைத்துள்ளார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார். காவல்துறையினரால் ஷாருக் உசேன் கைது செய்யப்பட்டபோது அவர் சிரித்து கொண்டே இருந்துள்ளார். இது வீடியோக்களில் பதிவாகி உள்ளது.

சிறுமி மாஜிஸ்திரேட்டிடம் தனது மரண வாக்குமூலத்தில் ஷாருக்கின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவர் 10 நாட்களுக்கு முன்பு தனது மொபைலில் பள்ளி மாணவியை அழைத்துள்ளார். தனது நண்பராக இருக்குமாறு அவரை தொந்தரவு செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தபோது சிறுமியை அவர் தாக்கி உள்ளார்.

பின்னர் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் மீண்டும் அவருக்கு போன் செய்து, தன்னிடம் பேசாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த வாக்குமூலத்தில், "இந்த மிரட்டல் குறித்து எனது தந்தையிடம் தெரிவித்தேன். அதன்பிறகு செவ்வாய்கிழமை அந்த நபரின் குடும்பத்தினரிடம் பேசுவதாக எனது தந்தை உறுதியளித்தார். 

இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றோம். நான் வேறொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். செவ்வாய்கிழமை காலை, முதுகில் வலியை உணர்ந்தேன். ஏதோ எரியும் வாசனையை உணர்ந்தேன். நான் கண்களைத் திறந்தபோது அவன் ஓடிப்போவதைக் கண்டேன். வலி தாங்காமல் கத்த ஆரம்பித்துவிட்டு அப்பாவின் அறைக்கு சென்றேன். எனது பெற்றோர் தீயை அணைத்து என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்" என்றார்.

பேசுவதற்கு கடினப்பட்ட அவர், தனது முகம் தவிர உடல் முழுவதும் எரிந்துவிட்டதாக கூறினார். மற்றொரு நபரின் பெயரையும் சிறுமி குறிப்பிட்டுள்ளார். சோட்டு கான் என்ற அந்த நபரிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது. அவரது மரணம் தொடர்பாக தும்காவில் பெரும் போராட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து, தும்காவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கு அரசியல் ரீதியாக மாறியுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக எதிர்க்கட்சியான பாஜக, முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஒரு உயர் காவல்துறை அலுவலர் (கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மட்டத்தில்) வழக்கை மேற்பார்வையிடுவார் என்று அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்தார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget