மேலும் அறிய

திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்யலாமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருமணமாகாத 24 வார கர்ப்பிணிப் பெண் ஒருவரின் கருவை அவரது உயிருக்கு ஆபத்து இல்லாமல் கலைப்பது குறித்து தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

திருமணமாகாத 24 வார கர்ப்பிணிப் பெண் ஒருவரின் கருவை அவரது உயிருக்கு ஆபத்து இல்லாமல் கலைப்பது குறித்து தீர்மானிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் இப்பெண்ணை பரிசோதித்த நிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, திருமணமாகாத பெண்ணை அவர் கோரியும் கருக்கலைப்புக்கு அனுமதிக்காமல் இருப்பது, மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் (Medical Termination of Pregnancy) நோக்கத்துக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளது.

திருமணமாகாத 24 வார கர்ப்பிணிப் பெண்..

மணிப்பூரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் மனம் ஒருமித்த உறவால் கருவுற்ற நிலையில், கடந்த ஜூலை 16ஆம் தேதி, தான் கருவுற்றிருப்பது தனக்கு மன வேதனையை ஏற்படுத்துவதாகவும், பி.ஏ., பட்டதாரியான தான் தாயாவதற்கு மனதளவில் தயாராக இல்லை என்றும், கர்ப்பத்தைத் தொடர்ந்தால் தன்னை அச்செயல் மனதளவில் இறுதிவரை வருத்தப்பட வைக்கும் என்றும் தெரிவித்து கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி மனு தொடர்ந்திருந்தார்.

மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் ..

இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர், நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒருமித்த உறவின் காரணமாக அப்பெண் கருவுற்றதையும், திருமணம் ஆகாத பெண்ணுக்கு சட்டவிதிகளின் படி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் சுட்டிக்காட்டி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க மறுத்தது.

மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின்படி 20 முதல் 24 வாரங்களுக்குள் விருப்பப்படும் பெண்கள் கருக்கலைப்பு செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம் எனும் நிலையில், முன்னதாக தன் 23 வார கருவை கலைக்க திருமணமாகாத இப்பெண்ணுக்கு அனுமதி வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்தது. 

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பெண் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கு இன்று (ஜூலை.21) விசாரணைக்கு வந்தது.

’திருமணமாகாத பெண்ணுக்கும் சலுகை தர வேண்டும்’

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, திருமணமான பெண்களுக்கு மட்டும் 20 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில்,  மனுதாரரான திருமணமாகாத பெண்ணுக்கு இந்தச் சலுகை மறுக்கப்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் விதிகளின்படி இதுகுறித்து மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் இயக்குநரை கேட்டுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் கருவை கலைக்க முடியுமானால் எய்ம்ஸ் அதனை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

சட்டத்தின் நோக்கத்தை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்!

தவிர 2003 ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் பிரிவு 3இன் கீழான விளக்கத்தில் ’கணவன்’ எனும் சொல்லுக்கு பதிலாக ’பார்ட்னர்’ எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவதையும், இச்சட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்களையும் உள் கொண்டுவருவதற்கான இச்சட்டத்தின் நோக்கத்தையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget