மேலும் அறிய

சபரிமலை கோவில் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.மத்திய அரசு கூறிய முக்கிய காரணங்கள்!

ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்ய அனுமதித்த தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

கேரளாவில் உள்ள உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இங்கு சிறுமிகள், மூதாட்டிகள் மட்டும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தன. மாதவிடாய் பருவ பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவது இல்லை.

சபரிமலை கோவில் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.மத்திய அரசு கூறிய முக்கிய காரணங்கள்!

இதையடுத்து, கடந்த 2006 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இதற்கு முன்பாக, 1991 ஆம் ஆண்டு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் பாரம்பரிய நடைமுறை உறுதி செய்யும் விதமாக கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தான் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் மனு தாக்கல் செய்தது.

மேலும், இந்த தீர்ப்பு அரசியலமைப்பின் கீழ் பெண்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக வாதிடப்பட்டது. அதன்பிறகு, இந்த வழக்கு 2018 செப்டம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து, 4:1 என்ற பெருமான்மையில் 10 முதல் 50 வயதுகுட்பட்ட பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்தலாம் என்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்த தீர்ப்பால் கேரளா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு விதமாக மறு ஆய்வு மணுக்கள்  தாக்கல் செய்யப்பட்டன.

அதன் பிறகு, 2019 நவம்பர் 14 ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட வேறொரு அர்சியல் சாசன அமர்வு, சபரிமலை ஐயப்பன் கோவில் , மசூதிகள் மற்றும் தர்காக்களில் முஸ்லீம் பெண்களுக்கு அனுமதி வழங்குதல், பார்சி இன பெண்கள் அவ்வினம் சாராத ஆண்களை திருமணம் செய்தல், தாவூதி போஹ்ரா சமூகத்தினரிடையே காணப்படும் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) வழக்கம் என வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை சுட்டிக்காட்டியது.


சபரிமலை கோவில் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.மத்திய அரசு கூறிய முக்கிய காரணங்கள்!

மேலும், ஒரு விவகாரத்தினை மட்டும் அடிப்படையாக கொண்டு பல்வேறு மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்து முடிவுகளை எடுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில் அனைத்து வழக்குகளும் ஒன்றாகவே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களில் இருந்து எழும் அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது.

கேரள சபரிமலை கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்தும், பல்வேறு மதங்கள் கடைப்பிடிக்கும் மத நடைமுறைகள் குறித்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இந்நிலையில், 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த விவகாரம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிலவும் கட்டுப்பாடுகள் மத நம்பிக்கையின் ஒரு பகுதி, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது பெண்களை இழிவுபடுத்துவதற்கோ அல்லது தீட்டு போன்ற காரணங்களுக்காகவோ அல்ல; மாறாக, ஐயப்ப பகவானின் நைஷ்டிக பிரம்மச்சாரி என்ற தனித்துவமான தன்மையை பாதுகாக்கவே இந்த மரபு கடைப்பிடிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மேலும், ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்ய அனுமதித்த தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எனவே, மதப் பன்முகத்தன்மையை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்றும், அனைத்து மத விவகாரங்களிலும் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Youtubeல் ஹோம் டூர் வீடியோ.. வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய கும்பல்.. அதிர்ச்சியில் பெண் பிரபலம்!
Youtubeல் ஹோம் டூர் வீடியோ.. வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய கும்பல்.. அதிர்ச்சியில் பெண் பிரபலம்!
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!
Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!
Top 10 News Headlines: வட இந்தியாவில் சூரிய வெடிப்பு.. யூட்யூபர் மாரிதாஸ் கைது.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: வட இந்தியாவில் சூரிய வெடிப்பு.. யூட்யூபர் மாரிதாஸ் கைது.. 11 மணி வரை நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By-Election: இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
US H-1B Visa Fee: ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
John Britto: விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
Tamilnadu Power Cut : தொடரும் மின் வெட்டு.! நள்ளிரவில் தவிக்கும் தமிழக மக்கள்- என்ன செய்கிறது தவெக அரசு.?
தொடரும் மின் வெட்டு.! நள்ளிரவில் தவிக்கும் தமிழக மக்கள்- என்ன செய்கிறது தவெக அரசு.?
Hyundai SUV: சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி
சப்-4 மீட்டரில் ஃப்ராங்க்ஸ், பஞ்ச் மாடலுக்கு போட்டியாக ஹுண்டாயின் எஸ்யுவி - பெட்ரோல், டர்போ, CNG வசதி
Embed widget