மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் பிரசாதம் இனி உங்கள் வீட்டிற்கே! தபால் துறை மூலம் ஆர்டர் செய்து மகிழுங்கள்!

இருக்கும் இடத்திலிருந்தே தபால் அலுவலகங்கள் மூலம் ஆர்டர் செய்தால்,  நமது வீட்டிற்கே சபரிமலையில் இருந்து அரவணை பிரசாதம் வந்து சேரும்.

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கான சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஸ்பாட் முன்பதிவு டோக்கன்களை கூட்டத்திற்கு ஏற்றவாறு குறைத்தும், அதிகரித்தும் வருகிறது.


சபரிமலை ஐயப்பன் பிரசாதம் இனி உங்கள் வீட்டிற்கே! தபால் துறை மூலம் ஆர்டர் செய்து மகிழுங்கள்!

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் அறுபடை முருகனுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுவது போலவே, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அரவணைப் பாயாசம் மற்றும் அப்பம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஐயப்பன் பிரசாதத்தை வாங்க சபரிமலைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை. அதாவது இருக்கும் இடத்திலிருந்தே தபால் அலுவலகங்கள் மூலம் ஆர்டர் செய்தால்,  நமது வீட்டிற்கே சபரிமலையில் இருந்து அரவணை பிரசாதம் வந்து சேரும். இதற்காக தபால் துறையுடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஒன்றிணைந்து செயல்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தே அரவணை பிரசாதத்தை வாங்குவதற்கு சபரிமலையில் உள்ள தபால் துறை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சபரிமலை ஐயப்பன் பிரசாதத்தை வாங்க முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சபரிமலை தபால் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் சபரிமலை பிரசாதத்தை கொண்டு சேர்ப்பதே எங்களது இலக்கு. இதற்காக வீட்டிற்கே பிரசாதத்தை டெலிவரி செய்யும் திட்டத்தில் தபால் துறை இறங்கியுள்ளது. இந்தப் பிரசாதத்தில் நெய், அரவணை, மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அரச்சனைப் பிரசாதம் ஆகியவை அடங்கும்.


சபரிமலை ஐயப்பன் பிரசாதம் இனி உங்கள் வீட்டிற்கே! தபால் துறை மூலம் ஆர்டர் செய்து மகிழுங்கள்!

ஒரு டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டை வாங்க ரூ.520-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதே போல் 4 டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டிற்கு ரூ.960 மற்றும் 10 டின் அரவணை கொண்ட பிரசாத கிட்டிற்கு ரூ.1,760-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். தபால் நிலையங்களில் பிரசாதம் வேண்டி பணம் செலுத்தினால், அடுத்த சில தினங்களில் சபரிமலை ஐயப்பன் பிரசாதம் உங்கள் வீடு தேடி வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மகர விளக்கு பூஜை தொடங்கி, முடியும் வரை மட்டுமே சபரிமலையில் உள்ள தபால் நிலையம் திறந்திருக்கும். அதன்பிறகு தபால் நிலையம் பூட்டப்பட்டு தபால் முத்திரைகள் பம்பையில் பத்திரமாக வைக்கப்படும். இந்தியாவில் குடியரசுத் தலைவருக்கு அடுத்து தனி பின்கோடு (689713) இருப்பது சபரிமலை ஐயப்பனுக்கு மட்டும் தான். ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜை தொடங்கியதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்களிடம் இருந்து பல்வேறு கடிதங்கள் வருகின்றன. பக்தர்களின் கடிதங்களை ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜிப்பது வழக்கம். இங்கிருக்கும் தபால் நிலையம் மூலமாகவே தற்போது ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதமும் வீட்டிற்கே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget