மேலும் அறிய

’என்னையும் கைது பண்ணுங்க’ - நாரதா வழக்கில் எல்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மம்தா ஆவேசம்..

மேற்கு வங்கத்தில் நாரதா வழக்கு தொடர்பாக தனது கட்சி எம்.எல்.ஏக்களை அனுமதியில்லாமல் கைது செய்ததாக கூறி முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்கத்திற்கு செல்லும்போது அவர்களின் கார்களும் தாக்கப்பட்டுவருகிறது. 

இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு நாரதா வழக்கு தொடர்பாக இன்று காலை 2 திரிணாமுல் அமைச்சர்கள் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை சிபிஐ கைது செய்து விசாரிக்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது. இவர்களை உரிய அனுமதி பெறாமல் சிபிஐ கைது செய்துவிட்டதாக கூறி முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 6 மணிநேரம் வரை நடைபெற்ற இந்த தர்ணாவின் போது கொல்கத்தா சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே அதிகளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அத்துடன் அவர்கள் சிபிஐ வளாகத்தின் பாதுகாப்பு காவலர்கள் மீது கற்களை எரிந்து தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவானது. 


’என்னையும் கைது பண்ணுங்க’ - நாரதா வழக்கில் எல்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மம்தா ஆவேசம்..

இறுதியில் இந்த முறையற்ற கைதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அக்கட்சியின் வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி, "இந்த நான்கு பேரை சட்டவிரோதமாக சிபிஐ கைது செய்துள்ளது. சபாநாயகர் இருக்கும் போது அவரிடம் முறையாக அனுமதி பெறாமல் இவர்களை கைது செய்தது தவறு. இது பாஜகவின் அரசியல் நடவடிக்கை. இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 2017ல் இவர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அப்படி இருக்கும் போது தற்போது எப்படி கைது செய்யமுடியும்" எனத் தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நாரதா செய்தி இணையதளத்தில் ஒரு கள ஆய்வு வீடியோ வெளியானது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் சிலர் போலியான நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றது தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதில் ஃபிர்ஹாத் ஹக்கிம், சுபர்தா முகர்ஜி, மதன் மித்ரா மற்றும் முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன் செட்டர்ஜி உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.  மேலும் இந்த வழக்கில் சுவந்து அதிகாரி மற்றும் முகுல் ராய் ஆகிய இருவரும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தனர். 


’என்னையும் கைது பண்ணுங்க’ - நாரதா வழக்கில் எல்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மம்தா ஆவேசம்..

எனினும் அவர்கள் இருவரும் தற்போது திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் மீது தற்போது சிபிஐ எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிபிஐயின் இந்தச் செயலை வண்மையாக கண்டித்துள்ளனர். முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு சாரதா சிட் மோசடி வழக்கில் முன்னாள் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரை சிபிஐ கைதுசெய்ய முற்பட்டது. அப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சிபிஐ அலுவலகத்திற்கு சென்று அவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
பெண் தொழில்முனைவோரை வழிநடத்தத் தயாரா?- ஊதியத்துடன் விண்ணப்பிக்கலாம்!- எப்படி?
PM Modi: ”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
”திமுகவின் ஆட்சியை பார்த்து சலிப்பு.. மக்கள் எதிர்பார்க்கும் பாஜகவின் செழிப்பு” - பிரதமர் மோடி..
Gouri Kishan : என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
என்னது 96 ராம் - ஜானுவுக்கு நிஜமாவே கல்யாணமா? ஷாக்கான நெட்டிசன்ஸ்..
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
Embed widget