மேலும் அறிய

’என்னையும் கைது பண்ணுங்க’ - நாரதா வழக்கில் எல்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மம்தா ஆவேசம்..

மேற்கு வங்கத்தில் நாரதா வழக்கு தொடர்பாக தனது கட்சி எம்.எல்.ஏக்களை அனுமதியில்லாமல் கைது செய்ததாக கூறி முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்கத்திற்கு செல்லும்போது அவர்களின் கார்களும் தாக்கப்பட்டுவருகிறது. 

இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு நாரதா வழக்கு தொடர்பாக இன்று காலை 2 திரிணாமுல் அமைச்சர்கள் உட்பட 4 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை சிபிஐ கைது செய்து விசாரிக்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது. இவர்களை உரிய அனுமதி பெறாமல் சிபிஐ கைது செய்துவிட்டதாக கூறி முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சிபிஐ அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 6 மணிநேரம் வரை நடைபெற்ற இந்த தர்ணாவின் போது கொல்கத்தா சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே அதிகளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அத்துடன் அவர்கள் சிபிஐ வளாகத்தின் பாதுகாப்பு காவலர்கள் மீது கற்களை எரிந்து தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவானது. 


’என்னையும் கைது பண்ணுங்க’ - நாரதா வழக்கில் எல்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மம்தா ஆவேசம்..

இறுதியில் இந்த முறையற்ற கைதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அக்கட்சியின் வழக்கறிஞர் கல்யாண் பானர்ஜி, "இந்த நான்கு பேரை சட்டவிரோதமாக சிபிஐ கைது செய்துள்ளது. சபாநாயகர் இருக்கும் போது அவரிடம் முறையாக அனுமதி பெறாமல் இவர்களை கைது செய்தது தவறு. இது பாஜகவின் அரசியல் நடவடிக்கை. இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையிடுவோம். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 2017ல் இவர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அப்படி இருக்கும் போது தற்போது எப்படி கைது செய்யமுடியும்" எனத் தெரிவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நாரதா செய்தி இணையதளத்தில் ஒரு கள ஆய்வு வீடியோ வெளியானது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் சிலர் போலியான நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றது தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதில் ஃபிர்ஹாத் ஹக்கிம், சுபர்தா முகர்ஜி, மதன் மித்ரா மற்றும் முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன் செட்டர்ஜி உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.  மேலும் இந்த வழக்கில் சுவந்து அதிகாரி மற்றும் முகுல் ராய் ஆகிய இருவரும் தொடர்புபடுத்தப்பட்டிருந்தனர். 


’என்னையும் கைது பண்ணுங்க’ - நாரதா வழக்கில் எல்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மம்தா ஆவேசம்..

எனினும் அவர்கள் இருவரும் தற்போது திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரும் மீது தற்போது சிபிஐ எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிபிஐயின் இந்தச் செயலை வண்மையாக கண்டித்துள்ளனர். முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு சாரதா சிட் மோசடி வழக்கில் முன்னாள் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரை சிபிஐ கைதுசெய்ய முற்பட்டது. அப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி 3 நாள் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சிபிஐ அலுவலகத்திற்கு சென்று அவர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget