மேலும் அறிய

ஒரு தோட்டா கூட சுடாமல், முழு தேசத்தையே அழிக்க முடியும்- பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபர.!

Minister Rajnath Singh: ராணுவத்தில் AI தொழில்நுட்பம் பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ கல்லூரியில் பேசியுள்ளார்.

மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்த வேண்டும் என ராணுவ அதிகாரிகளிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இன்று (அக்டோபர் 19) புதுதில்லியில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 62-வது (NDC) பாடத்திட்டத்தின் கீழ் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது பேசுகையில்,  உலகளாவிய எதிர்கால அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, சிறந்த வழிநடத்தும் திறன் கொண்ட சிந்தனையாளர்களாக செயல்படுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

புதுமையான தீர்வுகள் அவசியம்:

போர்முறையானது இன்று, பாரம்பரிய போர்க்களங்களை விஞ்சி பல கள சூழல்களைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதில் இணையதள தாக்குதல், தகவல் போர், போன்றவையும் வழக்கமான நடவடிக்கைகளைப் போலவே முக்கியமானது என அவர் கூறினார். இணையதள தாக்குதல்கள், தவறான தகவல் பிரச்சாரங்கள், பொருளாதார போர் ஆகியவை ஒரு தோட்டா கூட சுடப்படாமல் ஒரு முழு தேசத்தையும் பாதிப்புக்கு உட்படுத்தக்கூடியவை என்று அவர் குறிப்பிட்டார். சிக்கலான பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து புதுமையான தீர்வுகளை உருவாக்கும் திறனை ராணுவத் அதிகாரிகள் கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறினார்.


ஒரு தோட்டா கூட சுடாமல், முழு தேசத்தையே அழிக்க முடியும்- பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபர.!

செயற்கை நுண்ணறிவு :

இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிவேக தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எதிர்காலத்திற்கு ஏற்ற ராணுவத்தை உருவாக்கும் மிக முக்கியமான சக்தி என்று  ராஜ்நாத் சிங் விவரித்தார். நமது அதிகாரிகள் இந்த தொழில்நுட்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
ராணுவ நடவடிக்கைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கிய தொழில்நுட்பங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆழமான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  போரின் சவால்களை சமாளிக்க, நவீன கட்டமைப்பை ஏற்படுத்துவதில் என்டிசி போன்ற பாதுகாப்பு கல்வி நிறுவனங்கள் ஆற்றி வரும் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். 

சிறந்த ராணுவம்:

புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், உலகளாவிய பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து உறுதியான புரிதலை அதிகாரிகள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் போர்க்களத்திற்கு அப்பால், ராஜதந்திரம், பொருளாதாரம், சர்வதேச சட்டம் ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் கொண்ட, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, சிறந்த ராணுவத்தை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை  ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ:  சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
IND vs NZ: சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"புகார்கள் மீது உடனடி நடவடிக்கை.. நாமதான் முன்னுதாரணம்" தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ:  சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
IND vs NZ: சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"புகார்கள் மீது உடனடி நடவடிக்கை.. நாமதான் முன்னுதாரணம்" தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
IGNOU: தொலைதூரப் படிப்புகளில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
IGNOU: தொலைதூரப் படிப்புகளில் சேர அக்.31 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
IND vs NZ Test: அடக்கடவுளே! 99 ரன்னில் அவுட்டான ரிஷப் பண்ட்! சோகத்தில் மூழ்கிய இந்திய ரசிகர்கள்!
IND vs NZ Test: அடக்கடவுளே! 99 ரன்னில் அவுட்டான ரிஷப் பண்ட்! சோகத்தில் மூழ்கிய இந்திய ரசிகர்கள்!
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
Embed widget