மேலும் அறிய

"களங்கம் விளைவிக்கும் எதையும் செய்யாதீங்க" மாணவர்களுக்கு குடியரசு தலைவர் அட்வைஸ்!

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நேர்மை இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு செயலும் நியாயமாகவும் நெறிமுறையோடும் இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 அக்டோபர் 3) கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டு வரும் தருணம் இது என்று கூறினார். "மாணவ உணர்வை" எப்போதும் பராமரிக்க வேண்டும் என்று அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

"நற்பண்புகளுக்கு களங்கம் விளைவிக்கும் செயலை செய்ய வேண்டாம்"

தொடர்ச்சியான கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவும் என்றும் அவர் கூறினார். மாணவர்கள் தங்கள் லட்சியங்களையும், சமூக உணர்வையும் சமநிலைப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.

உணர்திறன் என்பது ஒரு இயற்கையான குணம் என்று அவர் கூறினார். சுற்றுப்புறம், கல்வி, விழுமியங்கள் ஆகிய காரணங்களால் சிலர் கண்மூடித்தனமான சுயநலத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்வதன் மூலம் ஒருவரின் நலனை எளிதாக அடைய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

மாணவர்களின் நற்பண்புகளுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்ய வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் மாணவர்களை கேட்டுக் கொண்டார். மிக உயர்ந்த தார்மீக விழமியங்கள் அவர்களின் நடத்தை மற்றும் வேலை பாணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

"அனைவரையும் உள்ளடக்கிய கல்வி"

அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நேர்மை இருக்க வேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயலும் நியாயமாகவும் நெறிமுறையோடும் இருக்க வேண்டும். கல்வி என்பது அதிகாரமளித்தலுக்கான சிறந்த ஊடகம் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்கல்வி வழங்கி வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி சமூக நீதிக்கு ஒரு முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார். மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகம் பல கிராமங்களை தத்தெடுத்துள்ளதுடன், கிராம வளர்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தியுள்ளது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் சமூகப் பொறுப்பு குறித்த உணர்வுள்ள மனப்பாங்கினை அவர் பாராட்டினார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
Embed widget