மேலும் அறிய

PM Modi: எனது மூன்றாவது பதவிக்காலத்தில் உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும்: பிரதமர் மோடி

மூன்றாவது ஆட்சி காலத்தில் உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என மோடி உறுதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமைந்துள்ள பிரகதி மைதானம் புதுப்பிக்கப்பட்டு, இன்று திறக்கப்பட்டுள்ளது. அதற்கு, பாரத் மண்டபம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையமான பாரத மண்டபத்தின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.

தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என மோடி உறுதி தெரிவித்துள்ளார்.

"முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும்"

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எனது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியா முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாறும். இது மோடியின் உத்தரவாதம். எனது முதல் ஆட்சிக் காலத்தில், பொருளாதாரத்தில் இந்தியா 10ஆவது இடத்தில் இருந்தது. எனது இரண்டாவது பதவிக்காலத்தில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறினோம்.

சாதனைப் பதிவுகளின் அடிப்படையில், மூன்றாவது ஆட்சி காலத்தில், நமது பொருளாதாரம் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறும். பாரத மண்டபம் போன்ற மையங்கள் நாட்டின் பெருமையை உயர்த்தும் அதே வேளையில், அதைத் தடுக்க முயன்றவர்களும் உள்ளனர்.

பாரத மண்டபத்தை தடுக்க சிலர் முயல்கின்றனர். ஒவ்வொரு வேலையையும் நிறுத்துவது சிலரின் நிர்ப்பந்தமாக உள்ளது. எத்தனையோ வழக்குகள் போடப்பட்டன. கொஞ்ச நாள் கழித்து அந்த ஆட்கள் சில நிகழ்ச்சிகளுக்கு இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

"5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்"

கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை, இந்தியாவின் உள்கட்டமைப்பு மாறிக்கொண்டிருக்கிறது. உலகின் மிக உயரமான ரயில் பாலம், மிக உயரத்தில் உள்ள மிக நீளமான சுரங்கப்பாதை இந்தியாவில் உள்ளது. மிக உயரமான மோட்டார் சாலை, மிகப்பெரிய அரங்கம், மிகப்பெரிய சிலை என அனைத்துமே இந்தியாவில்தான் உள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில், இந்தியாவில் 20,000 கிமீ ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்ட நிலையில், எனது அரசாங்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 40,000 கிமீ ரயில் பாதைகளை மின்மயமாக்கியது. இப்போது ஒவ்வொரு மாதமும், 6 கிமீ மெட்ரோ லைன், 4 லட்சம் கிமீ கிராமச் சாலைகளை கட்டி முடிக்கிறோம். 2014இல் டெல்லி விமான நிலையத்தின் கொள்ளளவு ஆண்டுக்கு 5 கோடியாக இருந்தது. இப்போது 7.5 கோடி. தற்போது, விமான நிலையங்களின் எண்ணிக்கை 150ஐ எட்டியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்தியாவில் கடும் வறுமை முடிவுக்கு வரும் என்று சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கொள்கைகள், நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதையே காட்டுகிறது" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கடைசி நேரத்தில் ரயில் நிலையம் மாறும் வசதி! விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கடைசி நேரத்தில் ரயில் நிலையம் மாறும் வசதி! விபரம் இதோ!
தூத்துக்குடிக்கு ரயில் சேவை: ஹைதராபாத் பயணிகள் குஷி! நிரந்தர ரயிலாக மாறியது, முழு விபரம் இதோ!
தூத்துக்குடிக்கு ரயில் சேவை: ஹைதராபாத் பயணிகள் குஷி! நிரந்தர ரயிலாக மாறியது, முழு விபரம் இதோ!
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல் கட்டாயம்! உங்கள் வண்டிக்கு என்ன நடக்கும்? அதிர்ச்சி தரும் உண்மை!
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல் கட்டாயம்! உங்கள் வண்டிக்கு என்ன நடக்கும்? அதிர்ச்சி தரும் உண்மை!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
Embed widget