மேலும் அறிய

PM Modi: பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் இந்தியா முன்னிலை..ஜி 20 சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி  பெருமிதம்

"காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் தெற்கில் உள்ள நாடுகள் குறிப்பாக பாதிக்கப்படுவதால், காலநிலை நடவடிக்கை உலகளாவிய தெற்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்"

ஜி-20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை தொடர்பான அமைச்சர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, பல்லுயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில் இந்தியா முன்னிலை வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார். விளிம்புநிலை மக்களின் பொது நலனை உறுதி செய்யும் வகையில் காலநிலை நடவடிக்கை அமைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"பாரிஸ் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட உறுதிமொழிகள் மீது நடவடிக்கை தேவை"

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் தெற்கில் உள்ள நாடுகள் குறிப்பாக பாதிக்கப்படுவதால், காலநிலை நடவடிக்கை உலகளாவிய தெற்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஐநா காலநிலை மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட உறுதிமொழிகள் மீது நடவடிக்கை தேவை. 

தெற்கில் உள்ள நாடுகள், அதன் வளர்ச்சி விருப்பங்களை காலநிலைக்கு ஏற்ற வகையில் நிறைவேற்ற உதவுவதில் இது முக்கியமானதாக இருக்கும்" என்றார்.

இந்தியாவின் சாதனைகளை விவரித்து பேசிய அவர், "2030 இலக்கை விட ஒன்பது ஆண்டுகள் முன்னதாகவே, புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து, இந்தியா மின்சாரத் திறனை அடைந்துள்ளது. இன்று, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில், உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

2070க்குள் "நிகர பூஜ்ஜியத்தை" அடைவதற்கான இலக்கையும் நாங்கள் நிர்ணயித்துள்ளோம். சர்வதேச சோலார் அலையன்ஸ், CDRI மற்றும் தொழில் மாற்றத்திற்கான தலைமைக் குழு உள்ளிட்ட கூட்டணிகள் மூலம் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம். இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு.

"இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்கேற்பால் இயக்கப்படுகின்றன"

பல்லுயிர் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் தேசம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. காந்திநகர் அமலாக்க சாலை வரைபடம் மற்றும் தளம் மூலம், காட்டுத் தீ மற்றும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அவசியத்தை உணர்ந்திருப்பீர்கள்.

முன்னோடி பாதுகாப்பு முயற்சியான புராஜெக்ட் டைகரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதன் அடிப்படையில், கிரகத்தின் ஏழு புலி வகைகளை பாதுகாப்பதற்காக இந்தியா சமீபத்தில் 'சர்வதேச புலி கூட்டணி'யை தொடங்கியுள்ளது. புராஜெக்ட் டைகரின் விளைவாக, இன்று உலகில் உள்ள 70 சதவீத புலிகள் இந்தியாவில் காணப்படுகின்றன.

'ப்ராஜெக்ட் லயன்' மற்றும் 'ப்ராஜெக்ட் டால்பின்' ஆகிய பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்கேற்பால் இயக்கப்படுகின்றன.

மிஷன் அம்ரித் சரோவர் ஒரு தனித்துவமான நீர் பாதுகாப்பு முயற்சி. இந்த திட்டத்தின் கீழ், 63,000 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் சுமார் ஒரு வருடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணி முற்றிலும் மக்களின் பங்கேற்பு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

எங்கள் "கேட்ச் தி ரெயின்" பிரச்சாரமும் சிறந்த முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் நீரைச் சேமிக்க, இரு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு உள் கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
ஜூலை 15க்குள் PF கணக்கில் 8.25% வட்டி வரவு.. உங்கள் பேலன்ஸை எப்படி செக் செய்வது?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
மெட்டா AI: உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறதா?
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
ஏடிஎம் பின் ஏன் 4 இலக்கங்கள்? சுவாரஸ்யமான உளவியல் கதை! விபரம் இதோ..
Onam special train : ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
ஓணம் பண்டிகை.! சென்னையில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Embed widget