மேலும் அறிய

PM Modi: பல்லுயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் இந்தியா முன்னிலை..ஜி 20 சுற்றுச்சுழல் மாநாட்டில் பிரதமர் மோடி  பெருமிதம்

"காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் தெற்கில் உள்ள நாடுகள் குறிப்பாக பாதிக்கப்படுவதால், காலநிலை நடவடிக்கை உலகளாவிய தெற்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்"

ஜி-20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை தொடர்பான அமைச்சர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, பல்லுயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில் இந்தியா முன்னிலை வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார். விளிம்புநிலை மக்களின் பொது நலனை உறுதி செய்யும் வகையில் காலநிலை நடவடிக்கை அமைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"பாரிஸ் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட உறுதிமொழிகள் மீது நடவடிக்கை தேவை"

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் தெற்கில் உள்ள நாடுகள் குறிப்பாக பாதிக்கப்படுவதால், காலநிலை நடவடிக்கை உலகளாவிய தெற்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஐநா காலநிலை மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட உறுதிமொழிகள் மீது நடவடிக்கை தேவை. 

தெற்கில் உள்ள நாடுகள், அதன் வளர்ச்சி விருப்பங்களை காலநிலைக்கு ஏற்ற வகையில் நிறைவேற்ற உதவுவதில் இது முக்கியமானதாக இருக்கும்" என்றார்.

இந்தியாவின் சாதனைகளை விவரித்து பேசிய அவர், "2030 இலக்கை விட ஒன்பது ஆண்டுகள் முன்னதாகவே, புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து, இந்தியா மின்சாரத் திறனை அடைந்துள்ளது. இன்று, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில், உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

2070க்குள் "நிகர பூஜ்ஜியத்தை" அடைவதற்கான இலக்கையும் நாங்கள் நிர்ணயித்துள்ளோம். சர்வதேச சோலார் அலையன்ஸ், CDRI மற்றும் தொழில் மாற்றத்திற்கான தலைமைக் குழு உள்ளிட்ட கூட்டணிகள் மூலம் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம். இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு.

"இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்கேற்பால் இயக்கப்படுகின்றன"

பல்லுயிர் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் தேசம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. காந்திநகர் அமலாக்க சாலை வரைபடம் மற்றும் தளம் மூலம், காட்டுத் தீ மற்றும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அவசியத்தை உணர்ந்திருப்பீர்கள்.

முன்னோடி பாதுகாப்பு முயற்சியான புராஜெக்ட் டைகரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதன் அடிப்படையில், கிரகத்தின் ஏழு புலி வகைகளை பாதுகாப்பதற்காக இந்தியா சமீபத்தில் 'சர்வதேச புலி கூட்டணி'யை தொடங்கியுள்ளது. புராஜெக்ட் டைகரின் விளைவாக, இன்று உலகில் உள்ள 70 சதவீத புலிகள் இந்தியாவில் காணப்படுகின்றன.

'ப்ராஜெக்ட் லயன்' மற்றும் 'ப்ராஜெக்ட் டால்பின்' ஆகிய பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் முன்முயற்சிகள் மக்களின் பங்கேற்பால் இயக்கப்படுகின்றன.

மிஷன் அம்ரித் சரோவர் ஒரு தனித்துவமான நீர் பாதுகாப்பு முயற்சி. இந்த திட்டத்தின் கீழ், 63,000 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் சுமார் ஒரு வருடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பணி முற்றிலும் மக்களின் பங்கேற்பு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

எங்கள் "கேட்ச் தி ரெயின்" பிரச்சாரமும் சிறந்த முடிவுகளைக் காட்டியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் நீரைச் சேமிக்க, இரு லட்சத்து எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நீர் சேகரிப்பு உள் கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
Embed widget