மேலும் அறிய

புல்லட்டுக்கு பீரங்கி.. தீவிரவாதிகளுக்கு சாவு மணி.. பயங்கரமாக பஞ்ச் பேசிய பிரதமர் மோடி

இந்தியாவின் பெண் சக்திக்கு பயங்கரவாதிகள் விடுத்த சவால் அவர்களுக்கு சாவு மணியாக மாறி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் தோட்டாக்களை வீசினால் பீரங்கு குண்டுகளால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியாவின் பெண் சக்திக்கு பயங்கரவாதிகள் விடுத்த சவால் அவர்களுக்கு சாவு மணியாக மாறி உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரமாக பஞ்ச் பேசிய மோடி:

லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "சிந்தூர் இப்போது நாட்டில் வீரத்தின் அடையாளமாக மாறிவிட்டது. நீங்கள் தோட்டாக்களை வீசினால், பீரங்கி குண்டுகளால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்.

கலாச்சாரம் மற்றும் மரபுகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நமது பாரம்பரியத்தில் பெண் சக்தியின் சின்னமாக சிந்தூர் உள்ளது. ராம பக்தியில் மூழ்கிய ஹனுமான், சிந்தூரத்தை பூசி கொள்வார். சக்தி பூஜையில் நாங்கள் சிந்தூரம் வழங்குகிறோம். இந்த சிந்தூர் துணிச்சலின் அடையாளமாக மாறிவிட்டது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் இந்தியர்களின் ரத்தத்தை மட்டும் சிந்தவில்லை. நமது கலாச்சாரத்தையும் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றனர். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், பயங்கரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு சவால் விடுத்துள்ளனர்.

"தீவிரவாதிகளுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி"

இந்த சவால் பயங்கரவாதிகளுக்கும் அவர்களைக் கையாளுபவர்களுக்கும் சாவு மணியாக மாறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில், நமது ராணுவம் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழித்தது. இந்த முறை, 75 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதே எங்கள் முயற்சி.

இதுதான் நாரி சக்தி வந்தன் ஆதினியத்தின் பின்னணியில் உள்ள உத்வேகம். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பெண்கள் இடஒதுக்கீடு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் பொருள் என்னவென்றால் பாஜக அரசு நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஒவ்வொரு மட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும் அதிகாரம் அளித்து வருகிறது. இன்று தேசப் பாதுகாப்பில் இந்தியாவின் மகள்களின் திறனை உலகம் காண்கிறது.

இதற்காக, கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளியிலிருந்து போர்க்களம் வரை, இன்று நாடு அதன் மகள்களின் துணிச்சலில் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையைக் கொண்டுள்ளது" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget