மேலும் அறிய

புல்லட்டுக்கு பீரங்கி.. தீவிரவாதிகளுக்கு சாவு மணி.. பயங்கரமாக பஞ்ச் பேசிய பிரதமர் மோடி

இந்தியாவின் பெண் சக்திக்கு பயங்கரவாதிகள் விடுத்த சவால் அவர்களுக்கு சாவு மணியாக மாறி உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் தோட்டாக்களை வீசினால் பீரங்கு குண்டுகளால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியாவின் பெண் சக்திக்கு பயங்கரவாதிகள் விடுத்த சவால் அவர்களுக்கு சாவு மணியாக மாறி உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பயங்கரமாக பஞ்ச் பேசிய மோடி:

லோக்மாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "சிந்தூர் இப்போது நாட்டில் வீரத்தின் அடையாளமாக மாறிவிட்டது. நீங்கள் தோட்டாக்களை வீசினால், பீரங்கி குண்டுகளால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்.

கலாச்சாரம் மற்றும் மரபுகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நமது பாரம்பரியத்தில் பெண் சக்தியின் சின்னமாக சிந்தூர் உள்ளது. ராம பக்தியில் மூழ்கிய ஹனுமான், சிந்தூரத்தை பூசி கொள்வார். சக்தி பூஜையில் நாங்கள் சிந்தூரம் வழங்குகிறோம். இந்த சிந்தூர் துணிச்சலின் அடையாளமாக மாறிவிட்டது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் இந்தியர்களின் ரத்தத்தை மட்டும் சிந்தவில்லை. நமது கலாச்சாரத்தையும் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிளவுபடுத்த முயன்றனர். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், பயங்கரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு சவால் விடுத்துள்ளனர்.

"தீவிரவாதிகளுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி"

இந்த சவால் பயங்கரவாதிகளுக்கும் அவர்களைக் கையாளுபவர்களுக்கும் சாவு மணியாக மாறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில், நமது ராணுவம் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழித்தது. இந்த முறை, 75 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதே எங்கள் முயற்சி.

இதுதான் நாரி சக்தி வந்தன் ஆதினியத்தின் பின்னணியில் உள்ள உத்வேகம். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பெண்கள் இடஒதுக்கீடு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் பொருள் என்னவென்றால் பாஜக அரசு நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஒவ்வொரு மட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும் அதிகாரம் அளித்து வருகிறது. இன்று தேசப் பாதுகாப்பில் இந்தியாவின் மகள்களின் திறனை உலகம் காண்கிறது.

இதற்காக, கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளியிலிருந்து போர்க்களம் வரை, இன்று நாடு அதன் மகள்களின் துணிச்சலில் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையைக் கொண்டுள்ளது" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Embed widget